Wednesday, October 14, 2009

கிராமத்துக்காதல்

மனசில்லாமல் மருகி தவிக்குறேன்
மகராணி மனசு புருஞ்சு

ஒத்தையடிப்பாதையில் போனாலும்
ஒத்தப்பனை போல ஒய்யாரமா
ஒம்மொகந்தேன்

கொலுசோட கொழுவச்சிருக்கும் மணி போல
கெரண்டை காலுல எனை கட்டி
ஒரண்டை இழுக்கிறா

மனசில்லாமல் மருகி தவிக்குறேன்
மங்கைய தான் மறக்கமுடியாம
மந்தியாகிட்டேன்

கேட்ட சேதிக்கு பதில் சொல்ல
குதிக்குதடி எம்மனசு
தாவாரத்து மழைத்தண்ணி போல

படிச்சு படிச்சு தேஞ்சு போன கடுதாசி
பல நாளைக்கு தூக்கத்த கெடுக்குமடி

பல்லுவெளக்க கூட மறந்துட்டேன்
பச்சைக்கிளி ஒன்னெனப்புல

இத்தனையும் சொல்லி
பயபுள்ள பவிச காட்டுது
பாழாப்போன காதல்

2 comments:

  1. wow........madurai village slang la beautiful lines!!!

    really nice!!!

    ReplyDelete
  2. நன்றி உங்களுடைய கருத்துக்களுக்கும் என்னுடைய ப்ளோக்கை பார்வையிட்டமைக்கும்.

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்