Monday, October 19, 2009

பேராண்மை - விமர்சனம்

இயக்கம் : எஸ்.பி.ஜனநாதன்
இசை:வித்யாசாகர்
தயாரிப்பு: ஐங்கரன்
நடிப்பு : ‘ஜெயம்’ ரவி , வடிவேலு , ஊர்வசி , வசுந்தரா , சரண்யா , வசுந்தரா , தனுஷிகா , லியாஸ்ரீ மற்றும் பலர்.

கல்லூரி மாணவிகள் தங்களுடைய என்.சி.சி பயிற்சிக்காக ஒரு கல்லூரிக்கு வருகின்றனர். அதில் 5 பேர் கதையின் நாயகிகள். அவர்களுடைய பேராசிரியராக ஊர்வசி. அந்த கல்லூரியின் வார்டனாக வடிவேலு. அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பாரஸ்ட் ரேஞ்சராக துருவன் என்னும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி. அவருடைய மேலதிகாரியாக பொன்வண்ணன்.

துருவன் மலைவாழ் மக்களில் படித்து முன்னேறிய ஓர் இளைஞன். மாணவிகளில் 5 பேருக்கு அவருடைய தாழ்ந்த நிலை பிடிக்கவில்லை அதை வைத்து அவரை டீஸ் செய்கின்றனர். அதில் ஒருவருக்கு (சரன்யா) துருவன் மேல் காதல் ஏற்படுகிறது.அந்த 5 மாணவிகளையும் தனிப்பயிற்சிக்காக காட்டினுள் அழைத்து செல்கிறார் துருவன். ஒரு மாணவியின் துடுக்கு தனத்தால் பாதை தவறி காட்டினுள் அகப்பட்டுக்கொள்கின்றனர். அப்பொழுது அவர்களுக்கு , இந்திய செயற்கோள் ஏவுவதை தடுக்க ஒரு அயல்நாட்டு கும்பல் முயலுகிறது அதை தடுத்து எவ்வாறு செயற்கோளை காத்தார் என்பதே கதை.

மாடர்ன் மாணவிகள் என்பதற்காக பெண்களை இப்படி காட்சிப்பொருளாக்கியிருக்க வேண்டாம். 5 பெண்களையும் குறைவான உடையில் அலையவிட்டுவிட்டார் இயக்குநர். அதிலும் அருவி பாடலில் ரெம்ப மோசம். அதைவிட மோசம் அவர்களின் உரையாடல். மார்டனை காட்ட வேண்டும் என்பதற்காக இப்படியா?
பெண்கள் அடிக்கும் லூட்டி நமக்கு களைப்பு ஏற்படுத்தவில்லை என்பதை ஒத்துக்கதான் வேண்டும்.படத்தில் ஏகப்பட்ட இடங்களில் நீளமான வாய்ஸ் சென்சார், அதில் பெரும்பாலும் மலைவாழ் மக்களை மேலதிகாரியும் மாணவிகளும் கிண்டல் செய்யும் வசனங்களாக தெரிகிறது.

முதல் காட்சியிலே கோவணத்துடன் நிற்கிறார் ரவி. உடலை முறுக்கேற்றி அட்டகாசமாக இருக்கிறார் இந்த சாக்லேட் பாய். நல்ல உழைப்பு தெரிகிறது. பெண்களும் , மேலதிகாரியும் எவ்வளவு தான் டீஸ் செய்தாலும் அதை பணிவோடு எதிர்கொள்ளும் நடிப்பு இயல்பாக உள்ளது. சபாஷ் ரவி உங்க கேரியரில் ஒரு நல்ல படம் இது.

காட்டிற்குள் செல்லும் பெண்களுக்கு ஆயுதங்களுக்கு பற்றி அறிமுகம் அளிக்கிறார் நல்ல தமிழில் ரவி மூலமாக இயக்குநர் நமக்கும் அது அறியும் வகையில் உள்ளது. இந்திய ராக்கெட்டை அழிக்க வரும் கும்பலின் தலைவனாக ஹாலிவுட் நடிகர் ரொனால்ட் நடித்துள்ளார். அதிகமாக பயன்படுத்தவில்லை என்றே தோனுது.

காட்டிற்குள் நடக்கும் இறுதி சண்டையில் அதிகமாக சிஜி பயன்படுத்தப்படிருக்கு ஆனாலும் அந்த காட்சி ஏதோ தாறுமாறாக இருப்பது போல் இருக்கிறது.

வசனங்களில் சாட்டையடி

“படிக்கலைனா தான் அடிப்பாங்க இவங்க படிச்சாலே அடிக்கிறாங்க” மலைவாழ் சிறுவன் சொல்வது

“இந்த மலையையும் ரியல் எஸ்டேட் போட்டிங்களா” மலைவாழ் ஒருவர்

“தமிழனோட வீரத்தை உலகமே பாக்குது” ரவி சொல்வதாக புலிகளை நினைத்து

நிறைய சமதர்ம, பொருளாதார கருத்துக்கள் வசனங்களா இருக்கிறது.

5 பெண்களை வைத்துக்கொண்டு ஒரு 16 பேர் கொண்ட அதிநவீன ஆயுதங்கள் கொண்ட டீமை அழிப்பது நம்ம வியப்பை அளித்தாலும் அதற்கான ஆரம்ப சண்டை நல்ல லாஜிக் உடையது.

படத்தில் எல்லாமே போதிக்கப்படுவது போல் இருப்பதும் கொஞ்சம் போர் அடிக்கிறது. பாடல் படத்திற்கு தேவையில்லை என்றாலும் அந்த சதானசர்ஹம் பாடல் இனிமை. காட்டுப்புலி அடிச்சு பாடலும் சமதர்ம கருத்தோடு வருகிறது.

கடைசியாக ரவியின் உழைப்பை நயவஞ்சக மேலதிகாரி திருடி பட்டம் வாங்குவதாக காட்டியிருப்பது சூப்பர்ப்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கனும். இருந்தாலும் பல இடங்களில் நல்ல ஆங்கிலப்பட த்ரில் இருந்தது உண்மை. இவாறான கதை எல்லோருக்கும் பிடிக்குமா என்பது மற்றுமொரு கேள்விக்குறி. எனக்கு பிடிச்சிருந்தது,

பேராண்மை - சிவப்பாய் மிளிர்கிறது.
நன்றி

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்