Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - விமர்சனம்

ஜீவா - நந்தா இருவரும் தம்பி - அண்ணன். மாற்றந்தந்தையின்(மாற்றாந்தாய் போல) பிள்ளைகள் இருவரும். அண்ணனுக்கு தம்பி மேல் வெறுப்பு , நந்தா ஊரை விட்டு 10 வயதில் ஓடி மும்பையில் கொஞ்சம் பெரிய டான்னாக இருக்கின்றார். அவரை திருத்தி ஊருக்கு மீண்டும் அழைத்து செல்ல அவரிடம் வருகிறார் ஜீவா.

அர்ஜூனாக ஜீவா இயல்பாய் இருக்கின்றார். அவரது காதலி அஞ்சனாவாக தப்சி. தப்சி நல்ல மெழுகு சிலை. கொஞ்சமாய நடிப்பு வருகிறது. ஆனாலும் அவரது முதிர்ச்சி தோற்றம் ஜீவாவின் இளமையான தோற்றத்தில் நமக்கு கொஞ்சம் ஜர்க் அடிக்கிறது. பாடல் காட்சிகளில் நல்லா இருக்கின்றார் தப்சி.

ஜீவா வழக்கம் போல துறு துறு இளைஞன். நல்லா செய்திருக்கார். சந்தானம் மும்பையில் நந்தாவிடம் சமையல்காரராக இருக்கின்றார். சமையலே தெரியாமல் சமையல்காராக இருக்கின்றார் சந்தானம் வரும் காட்சிகள் எப்பொழுதும் போல கல கல. கவுண்டரை ஞாபகப்படுத்துகிறார்.
“மூக்கை உருஞ்சிக்கிட்டே பேசுனா ரமணா குரல் வரும்னா மூக்கை சொரிஞ்சுகிட்டே பேசுனா தமனா குரல் வருமா” என்று டைமிங் காமெடி அவருக்கு கை கொடுக்கிறது.

முதல் பாதி முழுக்க ஜீவா ராச்சியம். இரண்டாம் பாதியில் நந்தா ஆளுகை நந்தா போன்ற இளைஞரை மும்பையின் டான் ஆக காட்டும் பொழுது சிரிப்பு வரக்கூடாது அல்லவா. நந்தா மிரட்டுகிறார் உடல் மொழியில் நந்தாவுக்கு ஈரத்திற்கு பின் நல்லதொரு வாய்ப்பு. கலக்கி இருக்கிறார். அதிலும் மிரட்டல் அவர் காதலியின் பிரிவு இதையெல்லாம் முகத்திலே இறுக்கத்துடன் வெளிப்படுத்தி சபாஷ் வாங்குகின்றார்.

ஏற்கனவே 3 பாடல் செம ஹிட் அவை படமாக்கிய விதமும் அருமை. அஞ்சனா அஞ்சான, காஞ்சன மாலா பாடல்கள் பிரமாதம்.

பிஜி முத்தையாவின் கேமரா திருவிளையாடளே. நல்லா கொடுத்திருக்கார்

தமனின் இசையில் ஈரத்திற்கு அப்புறம் தமிழில் நல்ல பாடல்கள். தெலுங்குல ஹிட் கொடுக்கின்றவர் இப்பொழுது தமிழிலும்.

வி.டி.விஜயனின் படக்கோர்வை அருமை வேகத்திற்கு வேகம் காதலுக்கு நிதானம் என்று நல்லா செய்திருக்கிறார்.

கண்ணனின் திரைக்கதையில் சில சறுக்கல்கள் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் பெரிய சார்ப்பா இல்லை.

மெயின் ஹீரோ ஜீவா இரண்டாம் பாதியில் இல்லாமலே போவது போன்ற தோற்றம் படத்தின் பலகீனம்.  அந்த க்ளைமாக்ஸ் உல்டா செம சொதப்பல்.

ஆனாலும் தலைப்பிற்கேற்ற படம் வந்தான் வென்றான்

எங்கேயும் எப்போதும் - திரைவிமர்சனம்

சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை முறையே தனியார் மற்றும் அரசுப்பேருந்து புறப்படுகிறது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதி ஒரு விபத்து. அதில் பயணிக்கும் கதாப்பாத்திரங்கள் மற்றும் முக்கிய பாத்திரங்களின்(திரைப்படத்தின்) கதையே எங்கேயும் எப்போது.

அனன்யா - சரவ் காதல் செம சுவாரஸ்யம். அனன்யாவுக்கு உதவும் முன்பின் தெரியாத சரவ்வின் உடல் மொழி செம அட்டகாசம் புது ஹீரோ கிடைச்சுட்டார். படம் பார்ப்பதற்கு முன் அனன்யாவா பிகர் சுமார் தான்னு நினைச்சேன் அந்த திருச்சி போன்ற சிறிய நகரத்தின் பெண் பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு . சரவ்வின் பேரையே கடைசியாக(படம் முடியும் போது) தான் கேட்ப்பார் நமக்கும் அப்போழுது தான் தெரிய வருகிறது. நல்ல அருமையான காதல் கதை இவர்களுடையது. இருவருக்கும் காதல் வந்து சரவ் அனன்யாவை தேடி திருச்சியும் அனன்யா இவரை தேடி சென்னை வந்து பின் திரும்பி செல்லும் போது இருவர் வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.

அஞ்சலி - ஜெய் காதல் அட்டகாசம் கொஞ்சம் போல்ட் ஆன திருச்சி பெண்ணாக அஞ்சலி, திருச்சியில் தங்கி வேலைபார்க்கும் ரெம்ப நல்ல கிராமத்து பையனாக ஜெய். ஜெய்க்கு கூட நடிக்க வருகிறது முந்தைய படங்களுக்கு ரெம்ப ரெம்ப நல்லா பண்ணிருக்கார். ஆனாலும் அஞ்சலில் கேரக்ட்டரைஷேசன் ரெம்ப அருமை. போல்ட் ஆன பொண்ணு காதலிப்பவனை அப்பாவிடம் அனுப்பி சம்மதம் கேட்க்க வைப்பது, அவனை உடல் உறுப்பு தானம் செய்ய வைப்பது எல்லாம் தினிக்கப்படாமல் அவரது கேரக்கடருக்கு ஏற்ற காட்சிகள் படத்தில்.

அந்த பேருந்தில் பயணிக்கும் ஒரு இளைஞனுக்கும் , இளைஞிக்கும் அங்கே மலரும் காதல் , துபாய்யில் 5 வருஷம் இருந்து முதல் முதலாக குழந்தையை பார்க்க வரும் நபர். அவர் குழந்தை நிஜமானு கேட்க்க இவர் பக்கத்தில் இருப்பவரிடம் ஆமானு சொல்ல சொல்ல போன் கொடுக்க அவர் கோபமாய் போனை வாங்க போனின் மறுமுனையில் அந்த குழந்தை லஞ்ச் சாப்பிட்டீங்களா அங்கிள் நு கேட்க்க மனுசன் முக மலர்ச்சியாவது இது போன்ற இயல்பான திரைக்கதை காட்சிகள்.

புதிய திருமண ஜோடி , ஒரு குழந்தை அதன் தாய் எல்லாம் கவனிப்பு பெறுகின்றார்கள்.

படத்தின் மற்றொரு ப்ளஸ் கேமரா மேன் சிறுத்தை யில் பணிபுரிந்த வேல்ராஜ்  நல்லா செய்திருக்கார் முன்னரே நிறைய படம் செய்திருக்கின்றார்.

அந்த விபத்து காட்சி அதில் உறையும் நம்மை ஒவ்வொரு காரக்டரின் சோகத்திற்கே இழுத்து செல்வது நம்மை அறியாமல் நடை பெறுகிறது.

அஞ்சலி செம துரு துருனு இருக்கார். அழகாக இருக்கின்றார். அவ்வளவு போல்ட் ஆன பொண்ணு ஜெய்யை ஆம்புலன்ஸில் சும்மா அனுப்புகிறார்னு நினைத்தால் அவனுக்கு காதுல ரத்தம் வந்துச்சு எனக்கு பயமா இருக்குனு கதறுகிறார்,

ஜெய் உடலை பார்த்து அழும் போது நமக்கும் அழுகை வருகிறது. அஞ்சலி மாதிரி நடிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க இயக்குநர்களே.

கதை , திரைக்கதை அதை எடுத்தவிதம் எல்லாம் சரியாக இருக்க இயக்குநராக சரவணன் நல்லா கொடுத்திருக்கார்.

காட்சிகளோடு ஒட்டிய இயல்பை மீறாத பாடல்கள் நன்றாக ரசிக்க வைக்கிறது. இசை அமைப்பாளர் நல்ல செய்திருக்கின்றார்.

அன்றாடம் செய்தி தான் படம் நல்ல மெசேஜ் கூடவே உறுப்பு தானம் பற்றியும் சொல்லிருக்காங்க

படம் பார்த்து முடித்தும் இன்னும் நினைவில் இருந்து மாறவில்லை

விமர்சனத்தை இவ்வளவு நீளமாக காட்சிகளை சொல்லி சொல்லிவிட்டாலும் அதை திரையில் உணரும் பொழுது நிச்சயம் ரசிப்பீர்கள்.

எங்கேயும் எப்போது - விபத்து நேரலாம் வரும் முன் காப்போம். நல்ல படம் கட்டாயம் விரசம் இல்லை குடும்பத்துடன் பார்க்கலாம்.