Saturday, October 24, 2009

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-2

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1


”டாடி எனக்கு என்ன பேர்த்டே கிப்ட்”- மழையில் கேட்டாள் ப்ரியா

”சாரிடா செல்லாம் மறந்துட்டேன் காலையில வாங்கிடலாம்”

கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகளின் நெற்றியில் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினான்.

சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட நிர்மலா

”இன்னைக்கு சினிமா போவோமா பேராண்மை கொஞ்சம் நல்லா இருக்காம்” - சூர்யா ரசிகை ரவிக்கு சர்ட்பிகேட் கொடுத்தாள்

”சாரிம்மா இன்னைக்கு அந்த மினிஸ்டர் கேஸ் அதுல கொஞ்சம் அனாலசிஸ் இருக்கு சோ முடியாது லேப்ல வேலை”

”மினிஸ்டர் கிட்டயே சுட்டாச்சா ”- கண்ணடித்து நகர்ந்தாள் குக்கரின் விசிலுக்கு.

தன்னுடைய பெர்சனல் லேபிற்குள் நுழைந்தான் சிவா. அவன் கண்டுபிடிச்சு வச்சிருந்த ஒரு இன்ஸ்ட்ருமெண்ட் - மெத்தேட் யை செயல்படுத்த நல்ல தருனம் கிடைத்ததில் மகிழ்ச்சியில் திளைத்தான்.

அவனோட கண்டுபிடிப்பு இது தான்

“இறந்தவங்களோட மூளையில் பதிவாயிருக்கும் தகவல்களை சேகரிக்கலாம் , அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த மர்மம், அவர் எப்படி இறந்தார் , இறப்பின் போது நிகழ்ந்தவை என்ன? , சொத்தைக்கூட எப்படி பிரிக்கனும்னு நினைச்சார்னு கண்டுபிடிக்கலாம்”

சரி இது எப்படி சாத்தியம் அதுக்கு சிவா கண்டுபிடிச்ச வழி

“மூளையின் தகவல்களை பெற ELECTRO ENCEPHALO GRAPHY மற்றும் MAGNETO ENCEPHALO GRAPHY முறைகளை மூலம் தகவல்களை சேகரிக்க முடிந்தது ஆனால் அவற்றை படிக்க இயலாதபடி ஒரே சங்கேத தகவல்களாக கிடைத்தது. இந்த குறையை தீர்க்க நிறைய இரவுகளை தின்று தீர்த்தன சிவாவின் மூளை அப்பொழுது தான் அவனுக்கும் இந்த யோசனை ஸ்பார்க் ஆச்சு. மூளையில் உள்ள மொழி புரிதலுக்கான பகுதிகளை(BROCA'S AREA AND WERNICKE'S AREA) இந்த தகவல்கள் இனைந்து வந்தால் மொழி புரிதல் கிடைக்கும் தகவல்கள் படிக்கும் வகையில் கிடைக்கும் என்பதே அவனது கண்டுபிடிப்பு”


தில்லையின் மூளையை எடுத்து அட்டகாசமாக அவன் செய்த கருவியில் இனைத்தான் எலக்ட்ரோ போல்கள் மூலம் வெளியாகும் தகவல்கள் மொழி புரிதல் ஏரியாவிலிருந்து ஒரு சிறிய சிப் மூலம் கடத்தப்பட்டடு வெளியேறி கையடக்க கணினியில் பதிவாகும் படி செய்யப்பட்டிருந்தது.

தன்னுடைய குலதெய்வத்தை நினைத்து பேட்டரியை இயக்கினான். அவனுடைய ஆராய்சி வீண் போகல. கிடைத்த தகவல்களை ஏகப்பட்டவை அவற்றை ஸ்பெசலாக செய்த ஒரு டாக்குமெண்ட் ரீடருக்கு கன்வெர்ட் செய்தான். பக்கங்கள் லட்சங்களை தாண்டி சேவ் ஆகிக்கொண்டிருந்தன.

அனைத்து தகவல்களும் முடிய நள்ளிரவை தாண்டியது. ஒருபக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் ஆச்சரியமும் கேள்விக்குறியும். இவ்வளவு தகவல்களை எப்படி படிப்பது ஒருங்கினைப்பது என்ற கேள்வி எழுந்து அவனை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியது.

யோசனை வந்தவனாய், கணினியில் சிறிய மாற்றங்களும் மேக்னடிக் ப்ளேட்டில் பொருத்தப்பட்டிருந்த சிப்பில் சிறிய ரக புரோகிராம் மாற்றி பதிந்து கொண்டான். மீண்டும் தகவலை மூளையிலிருந்து இறக்க ஆரம்பித்தான். நீண்ட நேரத்திற்கு பிறகு மகிழ்ச்சியில் திளைத்தான் சிவா. எல்லா தகவலும் நாட்கள் , நேரம் உள்பட தோன்றியது . சிப்பில் செய்த மாற்றம் முடிவுறும் நேரம் , தேதியை இன்று அதிகாலை 2.55 க்கு நிர்ணயித்தான் அதிலிருந்து நாட்களை , நேரத்தை கணக்கிடும் புரோகிராமை லிங் செய்து இந்த சாதனையை முடித்தான்.

கிடைத்த டேட்டாவை மேம்போக்காக படித்தான் தில்லை பற்றி

1.பிறந்தது ராமநாதபுரம் அருகில் உள்ள மண்டபம்
2.படிச்சது எம்ஏ. பிஎல்
3.செய்ய தூண்டிய கொலைகள் 7
.
.
.
.
.
.
இப்படி நீண்டது.

மரணம் சம்பவித்தது எப்படினு படிக்க இறுதி அத்தியாயங்களை நோக்கினான்....

தொடரும்...

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்