Thursday, October 15, 2009

கருப்பு டவுசர் போட்டவ

தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முன்னே தானே நம்ம பர்ச்சேஸ்லாம் ஒண்டிக்கட்டைக்கு அதுல ஒரு சுகம் இருக்குங்க. பொண்டாட்டி புள்ளைனு ஆயிட்டா அடிச்சி புடிச்சி ரெண்டு வாரம் முன்னமே போகனும் அந்த தொல்லை இல்லைங்க. அப்படிதான் இந்த தீபாவளிக்கும் முருகேஷ் கூட போயிட்டு கையில பைகளின் அலங்காரதோட வந்தோம்.

அப்பார்ட்மெண்ட் கீழ இருக்கும் கடைல டீ குடிக்கலாம்னு உக்கார்ந்தோம்.

“மாப்ள அங்க பாருடா...” முனகினான் முருகேஷ்

“யாருடா அந்த கருப்பு டவுசரா”

“ஆமாடா ஏரியாவுக்கு புதுசா இருக்கு செம குட்டி ல”

“டேய் ஏண்ட்டா இப்படி அலையுற கால காலத்துல கல்யாணம் செய்யுடானாலும் கேக்க மாட்டேங்குற”

“மச்சான் உன் கச்சேரிய நிறுத்து இதுலாம் வயசுல அனுபவிக்கனும், பாரேன் செவ செவனு இருக்கா”

“கருமம் டா பாக்க சைனிஸ் மாதிரி இருக்கா சப்பை மூக்கு, சராசரி உயரம் போதாக்கொறைக்கு போந்தா கோழி கனக்கா இருக்கா என்ன டேஸ்ட்டோ”

“டேய் வந்த இடத்துல இருக்குறத ரசிக்கனு, அத விட்டுடு நம்ம நேட்டிவிட்டிய தேடுறவன் வேஸ்ட், நாய்க்கறி திங்குற ஊருல நடுக்கறி நமக்கு தான்னு முந்தனும்” பெரிய தத்துவம் சொல்லிவிட்டு அவளை நோட்டம் விட்டான்.

அவள் எங்களுக்கு முன்னால் மேசை என்பதால் திரும்பி ஒரு லுக் விட்டு சிரிச்சிட்டே டீ குடிச்சா.

“ஆமா என்னமோ புரிஞ்ச மாதிரியே சிரிக்குறா” இது நான்

“மச்சான் எல்லாம் என்னைப்பார்த்து தான் டா”ஜொல்லினான் முருகேஷ்

”கிளம்பு , கிளம்பு” முருகேஷ் அவசரப்படுத்தினான் , என்னனு பார்த்தா கருப்பு டவுசர் கிளம்பி லிப்ட்க்கிட்ட போயிட்டா.

சரினு போனா லிப்ட் வரும் நேரத்திலும் நம்ம பய சும்மா இருக்கல

“கட்டுனா இவளைக்கட்டனும் டா...” பாட்டு வேற

அவள் சிரிப்போடு இருந்தாள்

லிப்டில் 3 பேரைத்தவிர யாரும் இல்லை எங்க கையிலோ புல்லா பேக்ஸ் அவ எங்களை பார்த்தா எந்த ப்ளோர்ங்ற கேள்வியே அவள் பார்வைக்கு அர்த்தம்

“தேர்ட்டீன்” முருகேஷ் முந்த

“பதிமூனா” அவள் மறுமொழியிட்டாள்

அங்க மூடுனவன் தான் முருகேஷ் வாயை தொறக்கலியே அடுத்த 15 நிமிசத்துக்கு

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்