Friday, February 11, 2011

காதல்


தியானம் சென்றால்
மனம் ஒரு முகம் ஆகுமாம்
காதலித்து பாருங்கள்
ஒரு முகமே மனம் எங்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இன்னும் ஞாபகம் இருக்கிறது
அந்த மாலை நேரம்
ஓர் ஆண்டிற்குப் பிறகான சந்திப்பு

வந்தவுடன் கண் மூட சொன்னேன்
எரிப்பது போல் பார்த்துவிட்டு மூடினாய்
பரீட்சயமான உன் கரங்களை பற்றுகிறேன்
வெட்கத்தில் இன்னும் சிவக்கிறது உள்ளங்கை

உனக்கான என் முதல் பரிசாய்
உன் விரல்களில் நுழைக்கும் தருணம்
கண்களை திறக்க சொல்கின்றேன்

கையில் இருந்த வைரத்தை விட
உன் கண்ணில் ஒளி அதிகமடி
முதன் முதலாய் உனக்கு என்று தேடியது
உன்னிடம் தோன்றுத்தான் போனது

நானும் தோற்றுத்தான் போனேன்
எதை உனக்கு அளிப்பது என்று
தடுமாறிப்போனேன்

உன் முத்தங்களை விட
இந்த கல் என்ன பெரிதா?
கண் மூடச்சொல்லிவிட்டாய்?
தடுமாறாமல் கேட்டாய்