Saturday, October 24, 2009

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1

பாகம் - 1 – தில்லையின் மூளை



இவரோட வலது முன்னங்கை உடைஞ்சிருக்கு சோ எதிர்ல இருந்து தாக்கியிருக்கனும் மேலும் எலும்பு மோசமா நொறுங்கியிருக்கு அதே நேரத்துல ஒரே ஒரு நேர்கோட்டுல மேல் பக்கவாட்டுல நொறுங்கியிருக்கு அடிக்க பயன்படுத்திய ஆயுதமும் ஆளும் ரெம்ப பலமானதா இருக்கனும். அடிச்ச வேகத்துல சதையில கொஞ்சம் சிக்கியிருக்கும் உலோகதுகள்களை பாக்கும் போது ஏதோ பழைய பைப் கொண்டு தாக்கியது போல இருக்கு எதுக்கும் அந்த திசுக்களை சோதனைக்கு அனுப்பி முடிவை பார்த்துக்கலாம்.

கொலை செய்தவன் கைதுப்பாக்கி பயன்படுத்திருக்கான். அவன் பெரிய கொலை வெறி பிடிச்சவனாக இருக்கனும் காரணம் புல்லட்டால் இவர் இறக்கவில்லை அதுக்கு முன்னமே இறந்துட்டார் அவர் மேல் உள்ள வெறுப்பை வெளிப்படுத்த இந்த 3 புல்லட்டுகளும் இதயத்தை ஒன்னு , இடது கிட்னியை லேசா உரசி ஒன்னு , கழுத்திலே ஒன்னுனு தொகுதி பிரிச்சிக்கிட்டன ஒரு வேளை மத்திய மந்திரி என்பதால் புல்லட்டுகளும் தொகுதி வரியா இறங்கிருக்குமோ.

தன் சகாக்களிடம் இந்த ரிப்போர்ட்டை விளக்கி கொண்டிருக்கும் அந்த கண்ணாடி போட்ட 40 வயசை 4 நாளைக்கு முன்னால் எட்டி பிடிச்ச சிவப்ரகாசம். சென்னை பாரீஸில் உள்ள அரசு பொது மருத்துவமனைல வேலை , போஸ்ட்மார்டம் செய்வதில் பலே கில்லாடி. அவனோட கணிப்பு எப்பவும் கவனிக்க மறந்ததில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த பிரேத பரிசோதனை பழக்கத்தை உலகின் பழமையான் தொழில்னே சொல்லலாம்.

அவனுக்கு ஒரு தனிப்பட்ட ஆராய்ச்சி கூடம் இருந்தது வீட்டிலே அதிலே மூளை (brain autopsy ) பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறான். அந்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்குமேனு தான் அவன் இந்த பிரேத பரிசோதனை யை விரும்பி ஏற்று செய்கிறான்.

சிவப்ரகாஷம் எம்பிபிஎஸ், எம்.எஸ் , அண்ணா நகரில் வீடு , மனைவி பெயர் நிர்மலா அவளும் மருத்துவரே ஆனா வேலை பாக்குறது சென்னை யின் பிரபல தனியார் மருத்துவமனையில் நியுராலஜி நிபுணர். இரண்டு குழந்தைங்க ரெண்டும் பெண் என்பதில் சிவாவுக்கு சந்தோசம் நிம்மிக்கு கொஞ்சம் வருத்தம். மூத்தவள் நிஷாவுக்கு 9 வயது 4வது படிக்கிறாள், இளையவள் ப்ரியா சமீபத்திய வெளியீடு நாளைக்கு தான் முதல் பிறந்த தினக்கொண்டாட்டம்.

பேக் டூ ஹாஸ்பிடல்...

குளிரில் நடுங்காமல் வீராப்புடன் இருக்கும் மத்திய அமைச்சர் தில்லைநாயகத்தை பார்த்தான். பாதுகாப்புத்துறை இனையமைச்சர் சகல மரியாதையுடன் டெல்லியில் வலம் வரும் தமிழக அமைச்சர்களில் ஒருவர் தொகுதி தென் மாவட்டத்தில் ஒன்று என்றாலும் சென்னை-டெல்லி ப்ளைட்டில் எப்பொழுதும் டிக்கெட் இருக்கும். மனுசன் பயங்கரமான கஞ்சன் நிறைய பிசினஸ் இருக்கு. ஒரே பையன்.

இன்று அதிகாலை சரியாக 2.55 க்கு கொல்லப்பட்டிருக்கிறார் தில்லை. கொடூரக்கொலை அவ்வளவு பாதுகாப்பு உள்ள பாதுகாப்புத்துறை இனைஅமைச்சரின் மரணம் அரசை ஆட வைத்துள்ளது.

ஒரு நிமிட மன ஓட்டத்திற்கு பின் இந்தாளோட மூளையை எடுத்துப்போய் வீட்ல உள்ள லேப்ல சோதிக்கனும்னு முடிவெடுத்தான் சிவா. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மூளையை அகற்றி தன் தொழில் சாதுர்யத்தை காட்டினான். பார்மலினில் மூளையை குளிக்க வைத்து தன்னுடைய பேக்கினுள் தள்ளினான்.

பிணவறை காவலாளியிடம் தன் அனுமதியில்லாமல் எந்த ப்ரேதத்தையும் வெளிச்செல்லக்கூடாது என்று கடுமையுடன் கூறிவிட்டு தன்னுடைய ஹோண்டா சிவிக்கை உசுப்பினான் சரியாக 30 நிமிடத்தில் வீட்டை அடைந்த்தான்.

தொடரும்...

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்