Friday, October 16, 2009

ஆதவன் - திரை விமர்சனம்

இயக்கம் : கே எஸ் ரவிக்குமார்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
நடிப்பு : சூர்யா , நயன்தாரா , வடிவேலு , சரோஜா தேவி

வளர்ப்பு தந்தையிடம் கூலிப்படையா இருக்கிறார் சூர்யா(ஆதவன்). லோக்கலில் ஆரம்பிச்சு இண்டர்நேஷனல் லெவல் மர்டர் வரை முடிக்கிறார் சூர்யா. குழந்தைகளை கொன்று உடல் உறுப்புகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் கும்பலை கண்டுபிடிக்க அமைக்கப்படும் ஒரு நபர் கமிஷன் நீதிபதியாக மறைந்த மலையாள நடிகர் முரளி. அவரை கொல்லும் அசைன்மெண்ட் சூர்யா அன் கோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரை கொல்ல சூர்யா செய்யும் முயற்சிகளே கதை.

முரளியை காலிசெய்ய அவரது வீட்டிற்குள் நுழைய வடிவேலுவை பயன்படுத்தி ஒரே நகைச்சுவை கலாட்டா தான். கொஞ்ச நேரத்துல யாரு ஹீரோனே தெரியாத அளவுக்கு வடிவேலு படம் முழுக்க வந்த அமர்க்களப்படுத்துகிறார். முரளியின் தங்கை மகளாக நயந்தாரா. வழக்கம்போல பாடலுக்கும் கவர்ச்சிக்கும் தொட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நல்லவேளை கவர்ச்சியை குறைத்துள்ளார். ஆனாலும் பாக்க சகிக்கல வேற ஹீரோயினை தேடுங்கப்பா தமிழ் இயக்குநர்களே. முரளியின் அம்மாவாக சரோஜாதேவி, அதே இழுத்து பேசும் தமிழ் நம்மைத்தான் பாடாய் படுத்துது.

சூர்யாவை வளர்க்கும் அப்பாவகா சாயாஷி ஷிண்டே அவரைப்பார்த்தாலும் காமெடி தான் தோனுது. அவரின் மகனாக ஆனந்த் பாபு(நாகேஷ் மகன்). நெடுநாளைக்கு பிறகு ஆரம்ப பாடலில் தன்னுடைய நடனத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

முரளியை கண்டவுடன் அவர் தான் தன்னுடைய அப்பா என்று அறியும் சூர்யா அவரை காக்க முயற்சிகள் மேற்கொள்வது செம லாஜிக் மீறல். அதைவிட கொடுமை கடைசி சண்டைக்காட்சி வில்லு, குருவி விஜயை தூக்கி சாப்பிடும் அளவுக்கு காதில் பூ. முடியல....

கே.எஸ்.ரவிக்குமார் படமென்றால் சகல மசாலாக்களும் இருக்கும் என்பது அறிந்ததே அதிலும் இந்த படத்தில் மசாலா ஓவர் டோஸ். செலவு பெருசா ஒன்னுமில்லை. ஒரு குடும்பம் நிறைய கல்கத்தா சாரி கொல்கத்தா என படம் நகர்கிறது. ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும் சிலருக்கு ஒன்லைன் வசனங்களோடு நிறுத்திவிட்டார். எல்லோரையும் பேசவிட்டா மெக சீரியல் ஆயிடுமோனு.

10 வயது சூர்யாவாக நடித்திருக்கும் காட்சிகள் கிராபிக்ஸ் கலக்கல் நல்லா செய்திருக்காங்க.

60களில் எம்ஜிஆர் , 70களில் ஜெய்சங்கர் , 80 களில் ரஜினி,கமல் , ரீசண்டா விஜய் போன்றோர் நடித்த அதே பழைய கதை காதில் பூ சுற்றும் வேலை. விஜய் யாக முயற்சிக்கிறார் சூர்யா. நல்லா தானே போய்கிட்டு இருந்தது ஏன் இப்படி சூர்யா தயவு செய்து கதைகளில் கவனம் செலுத்துங்க.

படத்தின் இரண்டு ஆறுதல் 1. சூர்யா - பின்னி பெடல் எடுக்கிறார் சகலமும் வருகிறது மனுசனுக்கு நல்ல நடிகன் அவர். 2.வடிவேலு - அய்யா உங்க ரவுசு தாங்க முடியல.

ஹாரீஸ் இசையில் இரண்டு பாடல்கள் இனிக்கிறது.

மொத்ததுல ஆதவன் ஆயிரம் கைகள் மறைக்கப்பட்டுள்ளான்.

நன்றி
மணி

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்