Thursday, May 02, 2013

வெற்றிடம்


ஒன்பதுகளும் ஓர் அசைவிற்கு ஆட
பரமனின் பாதியவள் விக்கித்து நிற்க
பண்ணிரு கையோன் கையுறு நிலையிற்க
ஆனை முகத்தோன் அதிர்ச்சியுற


ஆடிய திருத்தாண்டவம் அகிலமே குலுங்க
ஆட்கொள்பவன் யாக்கை தூக்கி
ஒற்றைக்காலிலே  ஒய்யாரமாய்
நின்று கொண்டே நீதி சொன்னவன்

இசையே தெய்வமாய் இறையே மானிடமாய்
அகிலமும் அவனென அன்பிலே பற்றி
கருப்பொருளே எனைக்கருக்கொள்வாய்

உன் பெரும் பாதத்தில் தூசியாய் 
உன் கடும் கோபத்தில் சிறு அனலாய்
எங்கும் உனை  எதிலும் உனை மறக்காத
வரம் வேண்டும் வேண்டுகிறேன்



No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்