Friday, February 26, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்

நடிப்பு : சிம்பு , த்ரிஷா மற்றும் சிலர்
இயக்கம் : கௌதம் வாசுதேவ மேனன்
இசை :ஏ.ஆர்.ரஹ்மான்

த்ரிஷாவின் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் படம் ஆரம்பிக்கிறது. சிம்புவின் பார்வையில் படம் சொல்லப்படுகிறது.

கார்த்திக்(சிம்பு) மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் முடித்து சினிமா ஆசையில் இயக்குநர் ஆக வேண்டும் என்று கனவோடு இருப்பவர். போலரிஸில் மென்பொருள் பணியில் இருக்கும் ஜெஸ்ஸி(த்ரிஷா) மலையாள கிறிஸ்துவக்குடும்ப பெண். ஜெஸ்ஸியின் வீட்டின் கீழ்த்தளத்தில் குடிவருகிறார்கள் சிம்பு குடும்பத்தினர்.

அங்கு த்ரிஷாவை கண்டவுடன் காதல் கொள்கிறார். அதை வெளிப்படுத்த துடிக்கிறார். சில இடைஞ்சல்கள் த்ரிஷா சிம்புவை விட ஒரு வயது மூத்தவர்,த்ரிஷாவின் அப்பாவிற்கு தன் மகளை ஒரு கிறிஸ்துவப்பையனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.

இவையெல்லாம் எடுத்துச்சொல்லியும் சிம்பு காதலில் உறுதியாக இருக்கிறார். த்ரிஷாவை தேடி கேரளா வரைக்கும் செல்கிறார். அந்த உருகலில் த்ரிஷா காதல் கொள்கிறார் ஆனால் வெளிப்படுத்த மறுக்கிறார். இந்த காதலினால் வலி தான் அதிகமாம் எனவே வேண்டாம் என்று மறுக்கிறார்.

இவர்களின் பழக்கம் த்ரிஷாவின் அண்ணனுக்கு தெரியவர அது கைகலப்பில் முடிய இரு குடும்பங்களும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. அப்பொழுது தான் த்ரிஷா தன் காதலை வெளிப்படுத்துகிறார் கோபத்தில்.


பெண்களுக்கே (காதலில்)ஏற்படும் முட்டாள் தனமான கோபத்தால் த்ரிஷா சிம்புவை பிரிகிறார்.

த்ரிஷாவை பிரிந்த வலியில் இருக்கும் சிம்பு தனது காதல் கதையே சினிமாவக எடுக்கிறார்.  படப்பிடிப்பின் போது த்ரிஷாவை சந்திக்கிறார். த்ரிஷாவிற்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்தது சிம்பு , த்ரிஷா கல்யாணம் செய்துகொண்டு முதல் படமும் வெளியாகிறது. சிம்பு-த்ரிஷா என்ன ஆனார்கள்.....

க்ளைமாக்ஸ் இயக்குநரின் , காதலியின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதால் இரட்டை க்ளைமாக்ஸ் போல தெரியும் ஆனாலும் நல்ல க்ளைமாக்ஸ். வித்தியாசம் தான் ஆண்டி க்ளைமாக்ஸ் என்றாலும்.

சிம்பு அடக்க ஒடுக்கமாக நடித்துள்ளார் கொஞ்சம் ஸ்மார்டாக இருக்கிறார், சாதரண மிடில் க்ளாஸ் வாலிபனாகவே வாழ்ந்துள்ளார். த்ரிஷா நிஜமாகவே கனவு தேவதை தான் த்ரிஷாவை இவ்வளவு அழகாக யாரும் காட்ட முடியாது. சிம்பு கூட இருக்கும் நண்பராக வரும் நபர் பெயர் தெரியவில்லை ஆனால் படத்தில் அவர் காக்க காக்க கேமரா மேன் கணேஷ் என்று காட்டப்படுகிறார்.

சிம்பு - த்ரிஷா - கணேஷ் இந்த மூவர் மட்டுமே படம் முழுவதும் வியாப்பித்துள்ளனர். வேறு சில நடிகர்கள் இருந்தாலும் சில காட்சிகள் மட்டுமே. சிம்புவின் ப்ரண்ட்ஸ் வட்டம் என்று தனிப்பட்டு காட்டப்படவில்லை என்பதால் சிறிது நகைச்சுவை தேக்கமே வாரணம் ஆயிரம் போல்.

சிம்பு - கணேஷ் த்ரிஷாவை தேடி கேரளா போவதும் த்ரிஷாவின் கல்யாணத்திற்கு போவதும் நல்ல காமெடி.

முதல் பாதி நன்றாக போகிறது த்ரிஷா பிரிந்து சென்ற பின்னர் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு. சினிமாத்தனமான பில்டப் இல்லாத காதல் காட்சிகளும், காதல் பிரிவும். க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் என்றாலும் ரசிக்க முடிகிறது. காதல் பிரிவை கொடுமையாக சித்தரித்த தமிழ் சினிமாவில் இந்த நடைமுறை காதல் பிரிவும் வித்தியாசமே.

பாடல்களில் ஏ.ஆர்.ஆர் பின்னிருக்கார். பிஜிஎம் ஏனோ ஆங்கில பாடல்களின் தொகுப்பு போலவே இருக்கிறது. பாடல்கள் அருமையோ அருமை...

பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்ப்.

கேமரா நன்றாக கையாண்டுள்ளார். நிறைய க்ளோசப் ஷாட்டுகள் மூலம் த்ரிஷாவை(பெண்களுக்கு சிம்பு) ரசித்து ஏற்க வைத்துள்ளார்.

எடிட்டிங் ஆண்டனி சொல்லவா வேணும் நல்லாவே இருக்கு கேரள படகு பயணத்தில் கேமரா பயணிக்க அந்த தண்ணீரிலே பெயர் போடப்படுவது அழகு.

கௌதம் சொந்த கதையை படமாக்கிருப்பாரோனு தோனுது. நாகரீகமான மெச்சூரானா , நடுத்தர குடும்பத்து காதல். ஆபாசம் இல்லா அநாகரிகம் இல்லா காட்சிகள் குடும்பத்துடன் சென்று பார்க்கவைக்கும் முகம் சுழிக்க வைக்கா காட்சிகள். இந்த முறையை தன்படங்களில் கௌதம் எப்பொழுதும் பின்பற்றுகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா - தேவதையின் வெளிச்சம்

நண்பர்கள் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Monday, February 08, 2010

ரசித்து பார்க்கும் 200 டாலர் கொலை

சீனாவில் உள்ள ஒரு வனப்பகுதி மிருககாட்சி நிலையத்தில் பின்வரும் கொடுமை நடக்கிறதாம். ஒரு மாட்டை 200 டாலருக்கு வாங்கி இந்த கொலையை ரசிக்கின்றனராம் வெளிநாட்டினர்.














மனித மனத்தின் ரசிப்புத்தன்மை எங்கேயோ போயிடுச்சு....

Thursday, February 04, 2010

அசல் - பழைய படங்களின் நகல்


நடிப்பு: அஜித் , பிரபு , சமீரா ரெட்டி ,  பாவனா , சுரேஷ் , யூகி சேது, சம்பத் , ராஜீவ் கிருஷ்ணா.
இசை : பரத்வாஜ்
இயக்கம் : சரண்
தயாரிப்பு : சிவாஜி பிலிம்ஸ்

கதை:

ப்ரான்ஸில் வசிக்கும் ஜீவானந்ததின்(அப்பா அஜீத்) மனைவியின் மகன்களுக்கும் , அவருடைய இல்லீகல் மனைவியின் மகனுக்கும்(மற்றொரு அஜீத்) நடக்கும் போட்டியில் யார் அசல் வாரிசாக இறுதியில் ஜெயிக்கிறார்கள் என்பதே.

ஜீவானந்தம் பல்வேறு நாடுகளுக்கு சட்டப்படி ஆயுதம் ஏற்றுமதி செய்யும் யுரோசியா எனும் நிறுவனத்தை நடத்துகின்றார் அவரது மகன்களாக சம்பத் மற்றும் ராஜூவ் கிருஷ்ணா. அவரது மற்றொரு மகன் சிவாவாக மற்றொரு அஜீத். ஜீவானந்தம் , சிவாவை நம்பி மட்டுமே பொறுப்புகள் கொடுக்க மிச்ச இரண்டு மகன்களுக்கும் கோபம். ஜீவானந்திற்கு பிடிக்காத இல்லீகல் ஆயுத பிசினஸ் செய்ய முற்படுகின்றனர் இருவரும். இந்நிலையில்  ஜீவானந்தம் மகன்களால் கொல்லப்படுகிறார். ஆயூத கடத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக ராஜீவ் கிருஷ்ணாவை மும்பையில் இருக்கும் கும்பல் கடத்துகிறது. அவரை விடுவிக்க அஜீத் மும்பை பயனமாகிறார். அவருடன் அவருடைய உதவியாளர் சமீராவும் மும்பை செல்கிறார். சமீராவுக்கு அஜித் மேல் காதல்.

மும்பையில் ஜீவானந்ததின் நண்பரான பிரபுவின் பாதுகாப்பில் இருக்கின்றனர். பிரபுவிடம் வேலை பார்க்கும் பாவனாவும் கண்டவுடன் காதல் கொள்கிறார். மேலும் பிரபுவிடம் வேலைபார்க்கும் டான் சமோஷா பேரைப்படித்தாலே காமெடி பீஸூனு தெரியுது தானே ஆமாம் கதையின் சொந்தக்காரரான யூகி சேது. அவருக்கு இரண்டு அடிப்பொடிகள் ஜீரா , சட்னி என்ற நாமகரணத்துடன்.
இவர்கள் செய்யும் சேட்டைகள் சிறிது சிரிப்பை வரவழைக்கின்றன.

இடையே பாவனா இரண்டு டூயட்டும், சமீரா ஒரு டூயட்டும் முடிக்கின்றனர். மும்பை கும்பலில் இருந்து ராஜீவ் கிருஷ்ணாவை மீட்டும் திரும்பும் போது அஜீத்தை போட்டு தள்ளுகின்றனர் ராஜீவும், சம்பத்தும். போட்டாச்சு இண்டர்வெல்.

பேக் டூ பாரீஸ் ஏன் அஜித்தை  கொலை செய்ய முயற்சித்தார்கள்? அவர்களை அஜீத் எப்படி பழி வாங்கினார் என்பது தான் மிச்ச சொச்சம்.

வழக்கமான ப்ழைய காலத்து காட்சி அமைப்புகள். மும்பை என்று சொல்லிவிட்டு அதைக்கூட மலேசியாவில் படமாக்கியுள்ளனர். பாரீஸையும் அறிமுக கேமராமேன் அற்புதமாக படமாக்கியுள்ளார். வில்லன் போலீஸாக வரும் சுரேஷ்(பழைய நதியா சுரேஸே தான்) கடைசியில் திருந்துவது அக்மார்க் தமிழ் சினிமா.

சமீரா, பாவனா முன்னவர் குதிரை பின்னவர் மான் குட்டி. ஆனாலும் மான் மனதில் ஒட்டிக்கொள்கிறது. அசடாக நடித்துள்ளார் பாவனா.

இசை பரத்வாஜ் இன்னும் அப்படியே தூங்கிகிட்டு இருக்கார். ஒன்னுமே சரியில்லை பிஜிஎமெல்லாம். பாட்டு 2-3 தேறுது.

ஆண்டனியின் படத்தொகுப்பு நல்லா இருக்கு.

சரன் இனிமேலாச்சும் பழைய கதை, பழைய சீன்கள் , பழைய திரைக்கதையை விடுங்க ப்ளீஸ். சரனும் பரத்வாஜ்ஜூம் கொஞ்சம் இல்லை இல்லை நிறைய மாறனும். ஜெயித்த கூட்டணி என்பதற்காக ஜெயித்த கதைகளையும் காட்சி அமைப்புகளையும் அடுக்குவது ஆவ்வ்வ்வ் சொல்ல வைக்குது. காட்சிகள் அனைத்தும் முன் கூட்டியே யூகிக்க வைக்கின்றன.

அசல் பழைய காட்சிகளின் நகல்