Saturday, October 24, 2009

சாபம்



எத்தனை ஆண்டு தவமோ
கதறிக்கொண்டு உன் வீட்டு
தாழ்வாரத்தில் விழுகிறது
மழை

மழை நீரில் கை நீட்டாதே
உன் மீது பட்ட துளிகள்
மூச்சை இழுத்துக்கொண்டு
குமிழியாய் அலைகிறதாம்

குமிழிக்கு சாப விமோசனம் தர
நீ கால் நனைக்கும் அழகில்
எனக்கேற்பட்டதடி
காதல் சாபம்

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்