Tuesday, June 28, 2011

மெய்யா? பொய்யா?

காதல் மெய்யா? பொய்யா?
மெய் தான் ...

மெய் என்னும் உடல் கொஞ்சம்
உறங்கி எழ தேவைப்படும்
நிழல் தான் காதல்.

நீ பேசி விட்டு சென்ற வார்த்தைகள் 
உன்னைக் கொல்லுமா தினம்?
புரியவில்லை எப்படி என்று?

நீ பேசிய கனிமொழி இன்னுமும்
காதோரம் கேட்பதிலே 
உறக்கம் தொலைக்கின்றன் 
என் இரவுகள்

மெய்யிலே திளைத்த நம் காதல்
மெய்யோடு மெய் மறந்து நின்றதெப்படி?

வாய் வார்த்தைகள் கூட 
வாக்கு என்று வாழும் எனக்கு
உன் பொய் வார்த்தைகள் 
மெய் என்று புரியாமல் போனதே....

எத்தனை நடிப்புகள்
எத்தனை ஏமாற்று வித்தைகள்

நேற்று அல்ல இன்றல்ல 
எத்தனை நாட்கள் என்பதை 
எழுத நாள் காட்டி கூட கிடைக்காதே...

உன் மீது கோபம் வந்தாலும்
என் மீதே பழி தீர்க்கிறேன்

திருப்பி தந்த பரிசை எதிர்பார்க்கவில்லை
என்றோ சொன்ன வார்த்தை கூட 
உனக்கு ஞாபகமில்லையா?

பொய்களில் திளைக்கும்
பெண்களின் காதல் 
மெய்யோடு போய்விடுகிறது.

காதல் மெய்யில் திளைக்கும் பொய்யே
ஆதலால் காதல் செய்யாதீர் 


Friday, June 03, 2011

சூப்பர் ஸ்டார் என்ன செய்கின்றார்

கடந்த ஒரு மாத காலமாகவே உடல் நலமில்லாமல் இருக்கும் தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் திரு ரஜினிகாந்த அவர்கள் எப்படி இருக்கின்றார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிராகவே உள்ளது.

சிங்கப்பூரில் அளிக்கப்பட்ட சிகிச்சையினால் தற்பொழுது நல்ல உடல் நல முன்னேற்றத்துடன் காணப்படுகின்றார் அதனால் அவரது கிட்னியின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.எனவே டயாலஸிஸ் நிற்த்தப்பட்டுள்ளது. அவரை சந்திக்க உடன் சென்ற உறவினர்கள் தவிர பிறருக்கு அனுமதி இல்லை.

மேலும் உடல் நலம் முழுவதும் சகஜ நிலைக்கு திரும்ப மேலதிக சிகிச்சைக்காக திரு ரஜினிகாந்த அவர்கள் ஒரு மாத காலம் அந்த மருத்துவமனையில் இருக்கப்போகின்றார். அவருடைய குடும்பதார்கள் ஒரு தற்போது இருந்து வரும் ஹோட்டலை காலி செய்து மருத்துவமனையின் எதிர் புறத்தில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருக்கின்றார்கள் என்று தெரிகிறது.

சூப்பர்ஸ்டார் முழுவதும் குணமாகி நலமுடன் நாடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்.