Saturday, October 24, 2009

சாபம் 2

மழையில் நனைந்தால்
காய்ச்சல் வந்ததுண்டு - இன்றோ
காதல் வந்துவிட்டதடி

கர்வத்துடன் வெளிப்படுத்திய எனக்கு
கவலை தோய்ந்த
கடைக்கண் பார்வையே
கடைசியில் கிடைத்தது

கண்டதும் காதல்
கடைசி வரை நம்பவில்லை
உனை காணும் நொடி வரை

நேற்றோடு நாற்பது நாட்கள்
விழியின் விதியில் வீழ்ந்து
ஞாபகப்படுத்தினாய்
எனக்கென்னமோ நாட்களில்
நம்பிக்கை இல்லை

சட்டென மண்டியிட்டு
மன்னிப்பு கோரினேன்
என்னவென்று பதறினாய்
தாமதமாய் உனை
கண்டதற்கென்றேன்
கண்ணடித்து

காதலுக்கு கண்ணில்லையாம்
காதலை காணதவன் சொன்னது
பிறகெப்படி கண்ணீர் வந்தது

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்