Thursday, October 15, 2009

கவிதை

என்
நிர்வாணம்
பிடிக்கவில்லையோ
மருகுகிறது
அருவியில்லா மலை

****************

எதை
தொலைத்து விட்டது
திரும்ப திரும்ப
தேடுகிறதே

கடிகார முள்

****************

ஒரு நாள்
பறிக்க மறந்தாலும்
தற்கொலை
செய்து கொள்கிறது

அவள் வீட்டு ரோஜாப்பூ

*****************

தினசரி நடக்கிறது
சூரிய கிரகணம்
என் நிலாப்பெண்
வெயிலில் நடக்கையிலே

*******************

தயவு செய்து
கருணைக்கொலை
செய்துவிடு
உன் பொல்லாக்காதல்
எனைக்கொல்கிறது

திருமணம்

***********

2 comments:

  1. \\எதை
    தொலைத்து விட்டது
    திரும்ப திரும்ப
    தேடுகிறதே

    கடிகார முள்\

    nice!!!!

    ReplyDelete
  2. நன்றி திவ்யா

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்