Friday, October 30, 2009

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-4

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-2
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-3


மார்சுவாரியில் கிடத்தப்பட்டு தலை அருகே அடிரா என எழுதப்பட்டிருந்த பிரேதம் மருத்துவருக்காக காத்திருந்தது.

காலை 7 மணிக்கே ஸ்பெஷல் ஆர்டரில் வந்திறங்கினான் சிவா, அவனுக்கு முன்பே அயூப் அலைந்துகொண்டிருந்தான். நட்பு புண்ணகையை கூட மறந்து இருவரும் ஹலோ சொல்லி அவரவர் வேலையை பார்க்க தொடங்கினர்.

அடிரா ஆறடிக்கும் மேல் உயரம் யூதர்களுக்குறிய அந்த பிடிவாதம் இறந்த பின்னும் முகத்தை இறுக்கி வைத்திருந்ததை காட்டுவதாய் நினைத்தான் சிவா.

உடம்பு சல்லடையாக சலிக்கப்பட்டிருந்தது துளைகளை பார்க்கும் போதே எம் 240-பி என்று தெரிந்தது. 400 டாலருக்கு விற்கப்படும் அந்த அமெரிக்க தயாரிப்பு இந்த கொலையை செய்துவிட்டு முதலாளியுடன் சென்றுவிட்டது.

அடிராவை அறுத்துப்பார்த்ததில் கிடைத்த முடிவை பட்டியலிட்டான்.

1.இதயத்தின் இடது வெண்டிரிக்கிள்ளை ஒரு தோட்டா வாடகைக்கு எடுத்துக்கொண்டதால் இதயம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.

2.உடம்பில் பல இடங்கிள் குண்டடிபட்டிருப்பதால் அதிகப்படியான ரத்தம் வெளியேறியும் மரணம் ஏற்பட்டிருக்கலாம்.

3.தாக்கப்பட்ட தடயங்கள் இல்லை.

4.இறந்து 3 மணி நேரம் இருக்கும்.

இன்னும் பல வழக்கமான சோதனைகளின் முடிவை எடுத்து வைத்து அறிக்கையை போலிஸிடமும் மேலதிகாரியிடமும் ஒப்படைத்து கிளம்பிவிட்டான் அடிராவின் மூளையோடு.

வெளியே வந்த சிவாவை பார்த்து லேசாக தலையாட்டினான் அயூப் இவனும் பதிலுக்கு யாரும் அறியா வண்ணம் ஆட்டி சென்றான் மூளையோடு.

மாலை 7 மணி சிவாவின் இல்லம்

டெல்-அவிவ் ல பிறந்து யுஎஸ் ல ஆராய்ச்சி படிப்பு முடித்துள்ளான் அடிரா.
இன்னும் திருமணம் ஆகவில்லை இரண்டு முறை காதல் தோல்வி.

….................

கறுப்பு டொயோட்டா க்ளாடினாவை கண்டவுடன் சலாம் போட்டு கதவை திறந்தான் கூர்க்கா. மிகவும் இயல்பாக காணப்பட்டான். காரியம் நடக்கனும் இல்லைனா காரியம் முடிக்கனும் இது தான் அடிராவின் அறிவுக்கு தெரிந்தது.


அடிராவின் சேட்டிலைட் போன் அலறியது

“Erev Tov adira” மாலை வணக்கம் அடிரா

“Erec Tov Boss” மாலை வணக்கம் தலைவரே

“Ma nishma ? “ எப்படி இருக்க

“Tov ,toda” நல்லா இருக்கேன் ,நன்றி

”நீங்க எப்படி இருக்கீங்க தலைவரே”

”நலமே , உனக்கு சொன்ன வேலைய மட்டும் முடிக்காம இப்ப நீ சிக்கலில் இருக்க”

”சிபிஐ யை சரிகட்டியாச்சு பாஸ்”

”முட்டாள் காக்கிகளை மறந்துட்டு செய்திகளை மட்டும் கவனிக்கிற”

அதிர்ச்சி கோடுகள் அடிராவின் மூளையில் , தவறு செய்துவிட்டதை உணர்ந்த வேளையில்

“slih'a adira, Tzeth'a leshalom , LeHitra'ot Adira......” மன்னித்து விடு , அமைதியில் உறங்கு ,சென்று வா அடிரா..............

முடிக்கும் போதே எங்கிருந்தோ வந்த எம் 240 பி யின் தோட்டாக்கள் சல்லைடை போட்டு அடிராவின் உயிரை தேடியது.

தொடரும்...

3 comments:

  1. Thanks for visiting my blog!!!

    Loads of stories are there in ur page.......will read them one by one and pass on my comments!!

    again thanks for ur visit Mani:-)

    ReplyDelete
  2. Divya said...
    Thanks for visiting my blog!!!

    Loads of stories are there in ur page.......will read them one by one and pass on my comments!!

    again thanks for ur visit Mani:-)


    thanks for ur comments divya

    ReplyDelete
  3. மாப்பு கதையெல்லாம் நல்லாருக்கு. கலக்குங்க.

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்