Monday, November 16, 2009

பணம்

ஒரு மனிதன் இருந்தான் நல்லா உழைப்பான் நல்லா பணம் சேமிப்பான், அதே நேரம் அதை செலவழிக்க மாட்டான். பெரும் செல்வம் சேர்த்து வைத்தான். அதை எண்ணிப்பார்ப்பதில் பெரும் ஆனந்தம் கொள்வான். தினமும் வேலை முடித்து வந்து பணத்தை எண்ணிப்பார்த்து ஆனந்தப்பட்டுக்கொண்ட பின்பே தூங்க செல்வான்.

ஒரு நாள் தன் மனைவியிடம் சொன்னான்

“நான் இறந்துவிட்டால் என்னுடைய பணம் முழுவதையும் என்னுடன் சேர்த்து புதைக்க வேண்டும் , என்னுடைய இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு அந்த பணம் தேவை”

“சரி” என்றாள் மனைவி

“நீ எனக்கு சத்தியம் செய்து கொடு “ என்றான் கணவன்

அவளும் பைபிள் மேல் வைத்து சத்தியம் செய்தாள்.இந்த நிகழ்ச்சி நடக்கும் போது மனைவியின் தோழியும் உடனிருந்தாள்.

திடிரென கணவன் இறந்துவிட அடக்கத்தின் போது ஒரு சிறிய கவரை சவப்பெட்டியினுள் போட்டாள், பின்பு அடக்கம் முடிந்தது.

தோழி கேட்டாள் “உன் கணவன் சொன்னபடி நீ பணத்தை போட வில்லையே”

“நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள் வாக்கு தவறமாட்டேன் நான் தான் சிறிய கவர் ஒன்னு போட்டேனே பாக்கலையா” திரும்பி கேட்டாள்

“உன் கணவன் நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தானே”

“ஆமாம் எல்லாவற்றையும் என்பேரில் ஒரு பேங்க் அக்கவுண்டில் போட்டு கணவரது பெயரில் செக் எழுதி அந்த கவரில் வைத்து போட்டேன் “என்றாள்

தோழிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க

2 comments:

  1. வாங்க கதிரவன் உங்களுடைய வருகைக்கு நன்றி.

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்