Monday, September 21, 2009

அகமும் புறமுமாய் நீ - பகுதி-3

பகுதி-1
பகுதி-2
ஏதோ நழுவி போவது போல் உணர்ந்தேன். ஆபத்தில் கை கொடுக்க தானே நண்பன்.இங்கேயும் அவன் தான் கை கொடுத்தான்.

அவள் “அண்ணா” என்று அழைத்தது என்னை அல்ல ஜானை என்று அறிந்து கொண்டேன் அந்த நொடிகள் ஏதோ மரணத்தை தொட்ட உணர்வு. இது தான் காதலோ?

ஜான் அவளுடன் அலவலாவிக்கொண்டிருந்தான், அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்

“ஜெனி, மீட் மிஸ்டர் ரமேஷ் என்னோட மேனஜர் ” என்றான்

அவனை செல்லமாய் அடிக்க கையை உயர்த்தியவுடன்

“ஓக்கே கூல் , என்னோட பிரண்ட் இவன் நம்ம காலேஜ் தான் , நீ இவனை பார்த்ததில்லையா”

“ஓ பார்த்திருக்கோமே” இது வால்களின் குரல்கள்

“ஊப்ஸ் அப்ப இவனை தெரியும் அப்படி தானே”

“எங்கள்ல ஜெனிக்கு தான் நல்லா தெரியும் “ இதுவும் வால்கள்

அவன் என்னைப்பார்த்தான் பார்வையிலே சில பல கேள்விகளை கேட்டான் , பிறகு

“இது ஜெனி என் சித்தி பொண்ணு” என்று அறிமுகம் செய்தான்

ஹாய் , ஹலோக்கல் பரிமாற்றம் முடிந்தவுடன் ஒரு வாலு முனுமுனுக்க ஆரம்பித்தது.

“காலையில இவ ஏதோ தொலைச்சுட்டாளாம்.........”

என்ன என்பது போல நானும் , ஜானும் பார்த்தோம் அதே வாலு தொடர்ந்தது

“அவளோட இ...” வாலு இழுத்தது

“இல்லை ஸ்ட்டிக்கர் பொட்டு” ஜெனி பதற

எல்லாம் புரிந்தவன் போல் அமைதியானான் ஜான், எனக்கே கொஞ்சம் நெர்வஸ் ஆனது போல இருந்தது. சூழ்நிலையை சகஜமாக்க

“என்ன சாப்டுறீங்க” நான் கேட்டேன்

“இப்ப தான் சாப்பிட்டோம் , நோ தேங்க்ஸ்” ஜெனி

“ஓக்கேண்ணா நாங்க கெளம்புறோம் , பை சார்” சொல்லிவிட்டு கிளம்பிட்டாங்க. அவங்க போனது தான் தெரியும் எனக்கு அவனை பார்க்கவே கூச்சமா இருந்தது. அவனே ஆரம்பிச்சான்

“மச்சான் , மச்சான் சொல்லி கடைசில மச்சானாக்கிட்டியேடா” ஜான் சிரிச்சிக்கிட்டே சொல்ல அப்ப தான் நிம்மதியானேன்.

”காலைல இந்த பொண்ணை தான் சொன்னேன் டா”

“ம் சரி, என்னோட சித்தி பொண்ணு அப்பா இல்லை 4 வருஷத்துக்கு முன்னால இறந்துட்டார், ஒரே பொண்ணு . டீட்டெய்ல் போதுமா இன்னும் வேணுமா”

“நீ மச்சான் இல்லடா அதுக்குமேல” நான் சொல்ல

“என்ன மாமா வா” செல்ல முறைப்போடு சொன்னான்

”மாப்ள இன்னைக்கு சிவாஸ் நீதான்”

“சரிங்க மாமா”

காலையில் ஏதோ நல்ல மூஞ்சில முழிச்சுருக்கோம் போலனு நினைச்சுக்கிட்டே இடத்தை காலி செய்தேன்.

தொடரும்...
பகுதி-1
பகுதி-2

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்