Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன்

இந்த திரைப்படத்தின் விமர்சனம் ஏற்கனவே நிறைய தளங்களில் அலசி அடித்துப்போடப்பட்டிருக்கு இருந்தாலும் எனக்கும் எழுத கிடைத்த ஒரு வாய்ப்பாக விமர்சனம் செய்கின்றேன். நேரம் இல்லாத காரணத்தால் இந்த தாமத விமர்சனம்.
நடிப்பு: ரீமாசென் , கார்த்தி ,ஆண்ட்ரியா மற்றும் மிகப்பெரிய கூட்டமே இருக்கிறார்கள்  
இயக்கம் : செல்வராகவன்  
இசை : ஜிவி பிரகாஷ்  
தயாரிப்பு : ரவீந்திரன்  


தெருக்கூத்தில் ஆரம்பிக்கிறது கதை 1279 ல் சோழப்பேரரசு , பாண்டிய பேரரசுவிடம் வீழ்வதாக காட்டப்படுகிறது. அந்த சமயத்தில் சோழர்களின் வாரிசை காப்பாற்ற ஒரு கூட்டமாக சோழர்கள் வெளியேறுகிறார்கள் செல்லும் பொழுது பாண்டியர்களிடமிருந்து கைபற்றிய பாண்டியர்களின் குல தெய்வ சிலையை கொண்டு செல்கின்றனர். செல்லும் சோழர்கள் தென்கிழக்கே வியாட்நாம் அருகே உள்ள ஒரு தீவில் இருப்பதாக தெரிகிறது ஆனால் அவர்களை யாரும் எளிதில் சென்று சேரா வண்ணம் 7 வகையான ஆபத்தினை உருவாக்கி வைத்து விட்டு செல்கின்றனர் சோழர்கள். தூது வரும் வரை அந்த தீவிலே காத்திருக்க உத்தரவு. 


தற்காலத்தில் அந்த சோழ இனத்தவரை தேடி ஆராய்ச்சியாளர்களின் பயணம் இருக்கிறது அதில் காணாமல் போன பிரதாப்போத்தன் ஆண்ட்ரியாவின் தந்தை. ஆண்டிரியாவும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்ச்சியாளர். ரீமா சென் என்னவா இருக்காருனு சொல்லப்படவில்லை அவர் தலைமையில் ஒரு குழு அந்த இளவரசன் வாழ்ந்த இடத்தை காண செல்கிறது. அந்த குழுவில் ஆண்டிரியாவும் இணைகிறார். இவர்கள் குழுவிற்கு உதவியாக எடுபிடி வேலை செய்யும் குழுவின் தலைவனாக கார்த்தி. கார்த்தி ஒரு எம்ஜிஆர் ரசிகர் என்று காட்டப்படுகிறது. ஆரம்ப காட்சிகளில் பின்புலத்தில் ஒரே எம்ஜிஆர் பாடல்களே ஒலிக்கிறது.  


கார்த்தி சவுண்ட் விடுவதும் , சைட் அடிப்பதுமே முழு நேரமாக செய்கிறார். அதிலும் ரீமா/ஆண்ட்ரியாவினை பார்க்கும் போது அவரின் பார்வையையே சென்சார் செய்யலாம் எனும் அளவிற்கு இருக்கிறது. 




முதல் ஆபத்து கடலில் தோன்றும் ஒரு வித்தியாசமான பிராணி(?) யால் அதில் சிலர் இறக்கின்றனர்.  


இரண்டாவது ஆபத்து செவ்விந்தியர்களால் அவர்களையும் சுட்டு சாய்க்கின்றனர் அதிகமான ரத்தம் இந்த காட்சிகளில் . இங்கே இந்த காட்சியை 5 நிமிடம் கூட இல்லாமல் சுத்தமாக வெட்டி விட்டனர் சென்சாரில் ஆனாலும் பார்த்துட்டோம்ல.  


மூன்றாவது ஆபத்து தங்குமிடத்தில் ஏராளமான பாம்புகள் படையெடுத்து நாசம் செய்கிறது. இந்த இடத்தில் தப்பிக்கும் முயற்சியில் கார்த்தி‍‍ + ரீமா + ஆண்ட்ரியா மூவரும் மற்றவர்களிடம் இருந்து தனித்துப்பிரிகின்றனர். இந்த பொண்ணுங்க ஆங்கில கெட்டவார்த்தைகளை எல்லாம் சரளமாக பேசுகின்றனர் அதை சென்சார் செய்தாலும் நன்றாகவே கேட்க முடிகிறது. மூவரும் பாலைவனத்தை கடக்கின்றனர் பசி தாகத்துடன்.  


மூவரும் ஒரு சதுப்பு நிலம் போன்ற இடத்தில் செல்கின்றனர் இங்கே கண்ணுக்கு அறியா புதைகுழிகள் ஏராளம் அதை எப்படி கடப்பது என்று ஆர்க்கியாலஸிட் ஆண்ட்ரியா கண்டுபிடிக்கிறார் ஓலைச்சுவடிகள் மூலம். நல்ல ரசனையான கண்டுபிடிப்பு மேலும் இந்த இடத்தில் பேக்கிரவுண்ட் இசை அருமை. என்ன யுவன் இருந்தால் இன்னும் மெனக்கெட்டிருப்பார்.  


அடுத்த ஆபத்தாக கிராமம் சோழர்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்தாக பெருமைப்படுகின்றன்ர் அங்கே ஒரு பாட்டு ஒம்மேல ஆசை தான் பாட்டு. அந்த பாட்டு எடுக்கப்பட்டிருக்கும் இடம் அருமையான லொகேசன் படத்தின் கதைக்கு நல்ல வழு சேர்க்கும் இடம். பாடல் முடிந்த உடன் இருக்கும் காட்சி அருமையோ அருமை. அதாவது அந்த இடத்தை கடப்பவர்களுக்கு சூணியம் வைத்தது போல பைத்தியம் பிடித்து தன்னிலை மறப்பர். இந்த காட்சியில் மூவரும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருப்பாங்க. 


அந்த சுயநினைவில்லா நிலையில் சோழர்களின் இடத்தை அடைகின்றனர். அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி இன்னும் சோழர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதை பார்த்து. மிகவும் வறுமையில் ஒரு வேளை உணவிற்காக சோழர்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர் இந்த சோழர்களின் அரசனாக பார்த்திபன் நல்ல மிடுக்காக நடித்துள்ளார். நல்ல கம்ப்பீரம் குரலும் ஒத்துழைக்கிறது ராசாவிற்கு. 


சோழர்கள் இன்னும் பழைய பேச்சுத்தமிழையே பயன்படுத்துகின்றனர். அந்த தமிழ் பெரும்பாலோனருக்கு புரியவில்லை என்பது இயக்குனருக்கு தோல்வியே சப்டைட்டில் போட்டிருக்கலாம். இலங்கைத்தமிழ் பேச்சு வழக்கு போல் இருக்கிறது கேட்க.  


சோழர்களிடம் அகப்படும் மூவரும் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். அந்த சமயத்தில் ரீமா தான் சோழர்களின் தளபதி உடையார் (என்னமோ பேர் சொல்கின்றார்) அவருடைய மகள் என்று விளிக்கிறார் . சோழர்கள் நாட்டின் பாதுகாப்பிறாக இரண்டு இனங்களில்(உடையார், வெள்ளாளர்) பெரும்பாலும் திருமணம் செய்வதாக படித்துள்ளது ஞாபகம் வந்தது. அரசன் நம்மும்படியாக தன் முதுகில் புலிக்கொடியை தோன்ற செய்து மறைக்கிறார் ரீமா. 




எல்லோரும் அந்த சூழலில் நம்பி ரீமாவை தூதுவனாக ஏற்று கொண்டாடி மகிழ்கின்றர். ரீமா பாண்டிய குல தோன்றல் எனவே சோழர்களை பழிதீர்த்து தெய்வ சிலையை மீட்க இவ்வாறு நாடகம் ஆடுகிறார்.  


ரீமா மீட்டாரா? சோழர்கள் என்ன ஆனார்கள்? கார்த்தி என்ன ஆனார்?  




படத்தின் ப்ளஸ் பாயிண்டுகள்  


* அருமையான லொகேசன்கள் 
* அருமையான கலை இயக்கம் (ஆர்ட் டைரக்சன்)
* நல்ல கேமரா * மிக நீண்ட ஆராய்ச்சி 
* ரீமாவின் மிரட்டும் நடிப்பு  


இந்த படத்தைப்பற்றி பொதுவாக மீடியாக்கள் தூற்றுகின்றன ஏன் என்றே தெரியவில்லை. ஆரம்பத்திலே இது ஒரு கற்பனை நிஜமல்லனு கார்ட் போட்ட பின்பும் ஏன் இன்னும் சோழர்களின் வாழ்க்கை முறை வாழ்ந்த முறையை பத்திரிக்கைகள் அடம்பிடித்து எழுதுகின்றன? ஆங்கில பட்த்திற்கு இனை என்றே இந்த படத்தினை குறிப்பிடலாம் 30 கோடியில் இவ்வளவு பிரமாண்டமான படத்தை சங்கர் கூட நினைத்து பார்க்கமாட்டார்.  


படத்தில் க்ளாமர் அதிகமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு நிஜம் தான் ரசிகர்களை வறட்சியாக பாலைவனம், பாம்பு என்று போரடிக்காமல் இருக்கவே செல்வா பயன்படுத்திருககர். ஆனாலும் வழக்கமான செல்வா படங்களின் கவர்ச்சி இலக்கணங்கள் இந்த படத்திற்கும் உண்டு.  


அந்த இடத்தை சேர்ந்த உடன் மேலதிக துருப்புகளை பெற ஐபோன் எடுப்பது ஒரு குறையாக சொல்லப்படுகிறது. பழமையையும் புதுமையும் இணைத்துப்பார்க்க முடியாமல் தவிப்பதால் இந்த காட்சிப்பிழை விமர்சகர்களுக்கு. ஹெலிகாப்டரில் வந்து சேரும் உதவிகளை வைத்து நேரடியாகவே இங்கு வந்திருக்கலாமே ஹெலிகாப்டரில் என்று சொல்பவர்களும் உண்டு இந்த இடத்தை கண்டுபிடிச்ச பின்பு தான் இங்கே சோழர்கள் இருக்கின்றர் என்றே அறிய முடிகிறது. 


மைன்ஸ் கொஞ்சம் லாஜிக் மீறல்களே அவையும் மறக்கூடியவைகளே. மொத்தத்தில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே இந்த படம்.

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்