Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - விமர்சனம்

ஜீவா - நந்தா இருவரும் தம்பி - அண்ணன். மாற்றந்தந்தையின்(மாற்றாந்தாய் போல) பிள்ளைகள் இருவரும். அண்ணனுக்கு தம்பி மேல் வெறுப்பு , நந்தா ஊரை விட்டு 10 வயதில் ஓடி மும்பையில் கொஞ்சம் பெரிய டான்னாக இருக்கின்றார். அவரை திருத்தி ஊருக்கு மீண்டும் அழைத்து செல்ல அவரிடம் வருகிறார் ஜீவா.

அர்ஜூனாக ஜீவா இயல்பாய் இருக்கின்றார். அவரது காதலி அஞ்சனாவாக தப்சி. தப்சி நல்ல மெழுகு சிலை. கொஞ்சமாய நடிப்பு வருகிறது. ஆனாலும் அவரது முதிர்ச்சி தோற்றம் ஜீவாவின் இளமையான தோற்றத்தில் நமக்கு கொஞ்சம் ஜர்க் அடிக்கிறது. பாடல் காட்சிகளில் நல்லா இருக்கின்றார் தப்சி.

ஜீவா வழக்கம் போல துறு துறு இளைஞன். நல்லா செய்திருக்கார். சந்தானம் மும்பையில் நந்தாவிடம் சமையல்காரராக இருக்கின்றார். சமையலே தெரியாமல் சமையல்காராக இருக்கின்றார் சந்தானம் வரும் காட்சிகள் எப்பொழுதும் போல கல கல. கவுண்டரை ஞாபகப்படுத்துகிறார்.
“மூக்கை உருஞ்சிக்கிட்டே பேசுனா ரமணா குரல் வரும்னா மூக்கை சொரிஞ்சுகிட்டே பேசுனா தமனா குரல் வருமா” என்று டைமிங் காமெடி அவருக்கு கை கொடுக்கிறது.

முதல் பாதி முழுக்க ஜீவா ராச்சியம். இரண்டாம் பாதியில் நந்தா ஆளுகை நந்தா போன்ற இளைஞரை மும்பையின் டான் ஆக காட்டும் பொழுது சிரிப்பு வரக்கூடாது அல்லவா. நந்தா மிரட்டுகிறார் உடல் மொழியில் நந்தாவுக்கு ஈரத்திற்கு பின் நல்லதொரு வாய்ப்பு. கலக்கி இருக்கிறார். அதிலும் மிரட்டல் அவர் காதலியின் பிரிவு இதையெல்லாம் முகத்திலே இறுக்கத்துடன் வெளிப்படுத்தி சபாஷ் வாங்குகின்றார்.

ஏற்கனவே 3 பாடல் செம ஹிட் அவை படமாக்கிய விதமும் அருமை. அஞ்சனா அஞ்சான, காஞ்சன மாலா பாடல்கள் பிரமாதம்.

பிஜி முத்தையாவின் கேமரா திருவிளையாடளே. நல்லா கொடுத்திருக்கார்

தமனின் இசையில் ஈரத்திற்கு அப்புறம் தமிழில் நல்ல பாடல்கள். தெலுங்குல ஹிட் கொடுக்கின்றவர் இப்பொழுது தமிழிலும்.

வி.டி.விஜயனின் படக்கோர்வை அருமை வேகத்திற்கு வேகம் காதலுக்கு நிதானம் என்று நல்லா செய்திருக்கிறார்.

கண்ணனின் திரைக்கதையில் சில சறுக்கல்கள் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் பெரிய சார்ப்பா இல்லை.

மெயின் ஹீரோ ஜீவா இரண்டாம் பாதியில் இல்லாமலே போவது போன்ற தோற்றம் படத்தின் பலகீனம்.  அந்த க்ளைமாக்ஸ் உல்டா செம சொதப்பல்.

ஆனாலும் தலைப்பிற்கேற்ற படம் வந்தான் வென்றான்

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்