Friday, August 20, 2010

நான் மகான் அல்ல விமர்சனம்

நடிப்பு: கார்த்தி , காஜல் அகர்வால் , ஜெயபிரகாஷ்
இயக்கம் : சுசீந்திரன்
இசை : யுவன்

போதையில் தடம் மாறிப்போகும் கல்லூரி மாணவர்கள் செய்யும் இரட்டைக்கொலைக்கு சாட்சியான நாயகனின் தந்தையை மாணவர்களே போட்டுத்தள்ள மாணவர்களை கருவறுக்க நாயகன் செல்கிறார். என்ன முடிவு என்பதே கதை.

சுசீந்திரன் முதல் படமாகிய வெண்ணிலா கபடிக்குழுவிற்கு பிறகு இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நகரத்து கதைக்களம். நாயகன் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஜாலியான இளைஞன் ஜீவாவாக கார்த்தி. அவர் ஆரம்பம் முதல் இடைவேளை செய்யும் சேட்டைகளும் , நையாண்டிகளும் இளைஞர்களின் வாழ்க்கையை கண் முன் நகர்த்துகிறது அதுவே முதல் பாதி விறுவிறுப்புக்கு உதவி செய்கிறது. ஆரம்ப காட்சிகளிலே நாயகியை காட்டிவிடுவதால் ஏதோ பெருசா கதைக்களம் இருக்கும் என்று தோன்றியது ஏமாற்றமே.கார்த்தி நன்றாக நடிக்கிறார், சண்டடை போடுகிறார் அதைவிட பருத்திவீரனில் இருந்து நான் மகான் அல்ல வரைக்கும் தொடரும் நக்கலும் நையாண்டியுமே அவருக்கு பலம். இயல்பாக பொருந்துகிறது அவருக்கு.

மிடில் க்ளாஸ் குடும்ப பிண்ணனி , கால் டாக்சி டிரைவர் மற்றும் நல்ல அப்பாவாக ஜெயபிரகாஷ் கிடைச்ச சின்ன கேரக்டரிலும் ஸ்கோர் செய்கிறார். காஜல் அகர்வால் ஒரு டூயட் ஒரு ஆரம்ப பாடலுக்கு பயன்பட்டிருக்கிறார் இடைவேளைக்கு அப்புறம் வரவே மாட்டேங்குறார். பொண்ணுக்கு நடிக்க ஸ்கோப் இல்லாத கேரக்டர். அழகாக இருப்பதால் தப்பிக்கிறார். இடைவேளைக்கு பிறகு என்ன ஆனார் எங்கே போனார் என்கிற விவரம் இல்லை.80ஸ் படங்கள் போல கடைசியில் எண்ட் கார்ட் போடும் போதாச்சும் காட்டிருக்கலாம்.

காமெடிக்கு கார்த்தியுடன் உறுதுணையாக இருப்பவர் வெண்ணிலா கபடிக்குழுவில் 50 புரோட்டா சாப்பிடுவாரே அவர்தான். இயல்பான பேச்சு மற்றும் உடல் மொழியால் கவர்கிறார்.

ஐந்து பசங்க சேர்ந்து சென்னையின் ஒதுக்குப்புற கடற்கரை ஏரியாவிற்கு வரும் காதலர்களை மிரட்டி அடித்து பெண்களை கவர்கின்றனர். காம வெறியில்  நண்பனின் காதலியையும் , நண்பனையும் போட்டுத்தள்ளுகின்றனர். விடலை பசங்கள் தான் என்றாலும் இருவர் நடிப்பில் கவர்கின்றனர். அந்த தாடிக்கார பையனும் , பரட்டைத்தலைப்பையனும்.

நாயகனுக்கு காமெடி தவிர ஸ்கோப் செய்யும் காட்சிகளும் இல்லை என்பதால் அடக்கி வாசித்து உள்ளார். இறுதி சண்டையில் சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறார். காஜல் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றதும் நேரே வீட்டிற்கே சென்று காதலை காஜலின் தந்தையிடம் சொல்வது, காஜலை கரெக்ட் செய்ய பொய்யான காதல் தோல்வியை சொல்வது, வேக்கிள் ரெக்கவரில வேலைக்கு சேர்ந்து மேனஜரையும் அவரது மனைவியையும் சண்டை போட வைப்பது போன்று நகைச்சுவை காட்சிகளே அதிகம் அதற்காகவே படம் பாக்கலாம். முதல் பாதியில் நிறைய டைமிங் காமெடிகள்.

இரண்டாம் பாதியில் படம் பொசுக்குனு முடியுற மாதிரி இருக்கும். மொத்தம் 2 மணி நேரமே .

பாடல்களிலும் , பிஜிஎம்மிலும் யுவன் ராஜ்ஜியம்.

வா வா நிலவை, பாடல் அருமை. ஒரே ஒரு டூயட் அதுவும் அருமை .

நல்ல நகைச்சுவை கலந்த திரைக்கதை , இசை மற்றும் கார்த்தியின் ஈடுபாடு படத்தை காப்பாற்றும்.

நான் மாகன் அல்ல டைட்டிலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.

6 comments:

  1. நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே வருகைக்கும் கருத்திற்கும்.

    ReplyDelete
  3. ivvalu sekirama?
    Nalla Vimarsanam

    ReplyDelete
  4. கார்த்திக்கு தொடர் வெற்றி தான் போல...

    ReplyDelete
  5. மொக்கை படம்னு சொல்லமா சொல்றிங்க

    ReplyDelete
  6. நேற்று இரவுதான் தான் பார்த்தேன்....
    நாலாவது படத்துலயும் அவர் எந்த கவலையுமில்லாத நல்லவராக சித்தரித்து....
    வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள்.... -
    'நான் சராசரி மகன்'

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்