Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - விமர்சனம்

ஜீவா - நந்தா இருவரும் தம்பி - அண்ணன். மாற்றந்தந்தையின்(மாற்றாந்தாய் போல) பிள்ளைகள் இருவரும். அண்ணனுக்கு தம்பி மேல் வெறுப்பு , நந்தா ஊரை விட்டு 10 வயதில் ஓடி மும்பையில் கொஞ்சம் பெரிய டான்னாக இருக்கின்றார். அவரை திருத்தி ஊருக்கு மீண்டும் அழைத்து செல்ல அவரிடம் வருகிறார் ஜீவா.

அர்ஜூனாக ஜீவா இயல்பாய் இருக்கின்றார். அவரது காதலி அஞ்சனாவாக தப்சி. தப்சி நல்ல மெழுகு சிலை. கொஞ்சமாய நடிப்பு வருகிறது. ஆனாலும் அவரது முதிர்ச்சி தோற்றம் ஜீவாவின் இளமையான தோற்றத்தில் நமக்கு கொஞ்சம் ஜர்க் அடிக்கிறது. பாடல் காட்சிகளில் நல்லா இருக்கின்றார் தப்சி.

ஜீவா வழக்கம் போல துறு துறு இளைஞன். நல்லா செய்திருக்கார். சந்தானம் மும்பையில் நந்தாவிடம் சமையல்காரராக இருக்கின்றார். சமையலே தெரியாமல் சமையல்காராக இருக்கின்றார் சந்தானம் வரும் காட்சிகள் எப்பொழுதும் போல கல கல. கவுண்டரை ஞாபகப்படுத்துகிறார்.
“மூக்கை உருஞ்சிக்கிட்டே பேசுனா ரமணா குரல் வரும்னா மூக்கை சொரிஞ்சுகிட்டே பேசுனா தமனா குரல் வருமா” என்று டைமிங் காமெடி அவருக்கு கை கொடுக்கிறது.

முதல் பாதி முழுக்க ஜீவா ராச்சியம். இரண்டாம் பாதியில் நந்தா ஆளுகை நந்தா போன்ற இளைஞரை மும்பையின் டான் ஆக காட்டும் பொழுது சிரிப்பு வரக்கூடாது அல்லவா. நந்தா மிரட்டுகிறார் உடல் மொழியில் நந்தாவுக்கு ஈரத்திற்கு பின் நல்லதொரு வாய்ப்பு. கலக்கி இருக்கிறார். அதிலும் மிரட்டல் அவர் காதலியின் பிரிவு இதையெல்லாம் முகத்திலே இறுக்கத்துடன் வெளிப்படுத்தி சபாஷ் வாங்குகின்றார்.

ஏற்கனவே 3 பாடல் செம ஹிட் அவை படமாக்கிய விதமும் அருமை. அஞ்சனா அஞ்சான, காஞ்சன மாலா பாடல்கள் பிரமாதம்.

பிஜி முத்தையாவின் கேமரா திருவிளையாடளே. நல்லா கொடுத்திருக்கார்

தமனின் இசையில் ஈரத்திற்கு அப்புறம் தமிழில் நல்ல பாடல்கள். தெலுங்குல ஹிட் கொடுக்கின்றவர் இப்பொழுது தமிழிலும்.

வி.டி.விஜயனின் படக்கோர்வை அருமை வேகத்திற்கு வேகம் காதலுக்கு நிதானம் என்று நல்லா செய்திருக்கிறார்.

கண்ணனின் திரைக்கதையில் சில சறுக்கல்கள் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் பெரிய சார்ப்பா இல்லை.

மெயின் ஹீரோ ஜீவா இரண்டாம் பாதியில் இல்லாமலே போவது போன்ற தோற்றம் படத்தின் பலகீனம்.  அந்த க்ளைமாக்ஸ் உல்டா செம சொதப்பல்.

ஆனாலும் தலைப்பிற்கேற்ற படம் வந்தான் வென்றான்

எங்கேயும் எப்போதும் - திரைவிமர்சனம்

சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை முறையே தனியார் மற்றும் அரசுப்பேருந்து புறப்படுகிறது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதி ஒரு விபத்து. அதில் பயணிக்கும் கதாப்பாத்திரங்கள் மற்றும் முக்கிய பாத்திரங்களின்(திரைப்படத்தின்) கதையே எங்கேயும் எப்போது.

அனன்யா - சரவ் காதல் செம சுவாரஸ்யம். அனன்யாவுக்கு உதவும் முன்பின் தெரியாத சரவ்வின் உடல் மொழி செம அட்டகாசம் புது ஹீரோ கிடைச்சுட்டார். படம் பார்ப்பதற்கு முன் அனன்யாவா பிகர் சுமார் தான்னு நினைச்சேன் அந்த திருச்சி போன்ற சிறிய நகரத்தின் பெண் பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு . சரவ்வின் பேரையே கடைசியாக(படம் முடியும் போது) தான் கேட்ப்பார் நமக்கும் அப்போழுது தான் தெரிய வருகிறது. நல்ல அருமையான காதல் கதை இவர்களுடையது. இருவருக்கும் காதல் வந்து சரவ் அனன்யாவை தேடி திருச்சியும் அனன்யா இவரை தேடி சென்னை வந்து பின் திரும்பி செல்லும் போது இருவர் வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.

அஞ்சலி - ஜெய் காதல் அட்டகாசம் கொஞ்சம் போல்ட் ஆன திருச்சி பெண்ணாக அஞ்சலி, திருச்சியில் தங்கி வேலைபார்க்கும் ரெம்ப நல்ல கிராமத்து பையனாக ஜெய். ஜெய்க்கு கூட நடிக்க வருகிறது முந்தைய படங்களுக்கு ரெம்ப ரெம்ப நல்லா பண்ணிருக்கார். ஆனாலும் அஞ்சலில் கேரக்ட்டரைஷேசன் ரெம்ப அருமை. போல்ட் ஆன பொண்ணு காதலிப்பவனை அப்பாவிடம் அனுப்பி சம்மதம் கேட்க்க வைப்பது, அவனை உடல் உறுப்பு தானம் செய்ய வைப்பது எல்லாம் தினிக்கப்படாமல் அவரது கேரக்கடருக்கு ஏற்ற காட்சிகள் படத்தில்.

அந்த பேருந்தில் பயணிக்கும் ஒரு இளைஞனுக்கும் , இளைஞிக்கும் அங்கே மலரும் காதல் , துபாய்யில் 5 வருஷம் இருந்து முதல் முதலாக குழந்தையை பார்க்க வரும் நபர். அவர் குழந்தை நிஜமானு கேட்க்க இவர் பக்கத்தில் இருப்பவரிடம் ஆமானு சொல்ல சொல்ல போன் கொடுக்க அவர் கோபமாய் போனை வாங்க போனின் மறுமுனையில் அந்த குழந்தை லஞ்ச் சாப்பிட்டீங்களா அங்கிள் நு கேட்க்க மனுசன் முக மலர்ச்சியாவது இது போன்ற இயல்பான திரைக்கதை காட்சிகள்.

புதிய திருமண ஜோடி , ஒரு குழந்தை அதன் தாய் எல்லாம் கவனிப்பு பெறுகின்றார்கள்.

படத்தின் மற்றொரு ப்ளஸ் கேமரா மேன் சிறுத்தை யில் பணிபுரிந்த வேல்ராஜ்  நல்லா செய்திருக்கார் முன்னரே நிறைய படம் செய்திருக்கின்றார்.

அந்த விபத்து காட்சி அதில் உறையும் நம்மை ஒவ்வொரு காரக்டரின் சோகத்திற்கே இழுத்து செல்வது நம்மை அறியாமல் நடை பெறுகிறது.

அஞ்சலி செம துரு துருனு இருக்கார். அழகாக இருக்கின்றார். அவ்வளவு போல்ட் ஆன பொண்ணு ஜெய்யை ஆம்புலன்ஸில் சும்மா அனுப்புகிறார்னு நினைத்தால் அவனுக்கு காதுல ரத்தம் வந்துச்சு எனக்கு பயமா இருக்குனு கதறுகிறார்,

ஜெய் உடலை பார்த்து அழும் போது நமக்கும் அழுகை வருகிறது. அஞ்சலி மாதிரி நடிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க இயக்குநர்களே.

கதை , திரைக்கதை அதை எடுத்தவிதம் எல்லாம் சரியாக இருக்க இயக்குநராக சரவணன் நல்லா கொடுத்திருக்கார்.

காட்சிகளோடு ஒட்டிய இயல்பை மீறாத பாடல்கள் நன்றாக ரசிக்க வைக்கிறது. இசை அமைப்பாளர் நல்ல செய்திருக்கின்றார்.

அன்றாடம் செய்தி தான் படம் நல்ல மெசேஜ் கூடவே உறுப்பு தானம் பற்றியும் சொல்லிருக்காங்க

படம் பார்த்து முடித்தும் இன்னும் நினைவில் இருந்து மாறவில்லை

விமர்சனத்தை இவ்வளவு நீளமாக காட்சிகளை சொல்லி சொல்லிவிட்டாலும் அதை திரையில் உணரும் பொழுது நிச்சயம் ரசிப்பீர்கள்.

எங்கேயும் எப்போது - விபத்து நேரலாம் வரும் முன் காப்போம். நல்ல படம் கட்டாயம் விரசம் இல்லை குடும்பத்துடன் பார்க்கலாம்.

Tuesday, August 30, 2011

மங்காத்தா - விமர்சனம்

மும்பை தாராவியின் பெரிய தலை செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் பெரிய பணம் 500 கோடி கறுப்பு பணம்(ஆனா எல்லாம் டாலரா தான் இருந்துச்சு :) ) சூதாட்டத்தில் ஈடுபடப்போவது தெரிந்த செட்டியார் மும்பை டான் களிடம் பேசி அந்த பணத்தை கை மாத்தி விடும் பொறுப்பை ஏற்கிறார்.

இது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ  கணேஷ், தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய ஐஐடி கோல்மெடலிஸ்ட் நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க.

அதே பணத்தை கொள்ளையடிக்க அவர்களுடன் நுழைகிறார் தல , அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வினாயக், செட்டியார் பெண்ணை கரெக்ட் செய்து செட்டியாரிடமும் பழகுகிறார்.

சில பல கோக்கு மாக்குகளை செய்து பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து நூல் பிடித்து  ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி , மகத்(பேர் தெரியல) லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.

பணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூன். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.

இறுதியில் பணம் கைபற்ற பட்டதா? யார் கைபற்றினார்கள்? செட்டியார்?அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்

முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அவர் செய்யும் ஹ்யூமர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. தல மொத்ததில் நெகடிவ் காரெக்டரில் மின்னுகின்றார்.

த்ரிஷா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே. ஹீரோயின்னு சொல்ல முடியாது அவருடைய கேரக்டருக்கு ஏற்ற காட்சிகள் மட்டுமே படத்தில் என்பது நல்ல விசயமே தேவையில்லாத செண்டிமெண்ட் இல்லாமல் இருக்கின்றது,

அஞ்சலி ஒரு பாட்டுக்கும், லெஷ்மி ராய் 2 பாட்டுக்கும் இருக்கின்றனர்.அஞ்சலி அவ்வளவு அழகு.

ஆக்சன்கிங் அர்ஜீன் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஆனா சின்ன ட்வீஸ் இருக்கு க்ளைமாக்ஸ்ல.

வாடா பின்லேடா பாட்டு நல்லா இருக்கு படமாக்கிய விதம். விளையாடு மங்காத்தா பாட்டும் சூப்பர்.

ப்ரேம்ஜி காமெடியில் கலக்குகின்றார் மனுஷன் அந்த நூடுல்ஸ் தலையுடன் எண்ட்ரி ஆகும் போது காமெடி தான்.

விளையாட்டு பிள்ளைனு நினைச்ச வெங்கட் பிரபு திரைக்கதைய கொஞ்சம் கூட பிழை செய்யாமல் நகர்த்துகின்றார். அளவான தேவையான காட்சிகள் மட்டுமே கேரக்டர்களுக்கு. சபாஷ்.

யுவனின் பாட்டுகள் ஏற்கனவே கலக்கிவிட்டதால் பின்னனி இசையிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கார். அந்த தீம் மியுசிக் சான்ஸே இல்லை ராக்க்கிங்.

படம் கொஞ்சம் நீளம் தான் 2 மணி 40 நிமிசம் கிட்ட ஓடுது. ஆனாலும் போர் இல்லை.

ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் சென்சாரில் சிக்கும்னு தெரிஞ்சே வச்சிருக்காங்க. அதிலும் கடைசியார் தல யின் வாய் உச்சரிப்பு என்ன சொல்றார்னு தெளிவா க்ளோசப்ல காட்டுறாங்க. என்ன பன்றது கெட்டவன் கேரக்டருக்கு சரிதான்.

அஜித் கொஞ்சம் சிரமப்பட்டு நடிச்சிருக்கார்.இருக்காதா டான்ஸ்லாம் ஆடியிருக்கார் :)  தலையின் 50 வது படம் தல தீபாவளி போல தான்.

Tuesday, June 28, 2011

மெய்யா? பொய்யா?

காதல் மெய்யா? பொய்யா?
மெய் தான் ...

மெய் என்னும் உடல் கொஞ்சம்
உறங்கி எழ தேவைப்படும்
நிழல் தான் காதல்.

நீ பேசி விட்டு சென்ற வார்த்தைகள் 
உன்னைக் கொல்லுமா தினம்?
புரியவில்லை எப்படி என்று?

நீ பேசிய கனிமொழி இன்னுமும்
காதோரம் கேட்பதிலே 
உறக்கம் தொலைக்கின்றன் 
என் இரவுகள்

மெய்யிலே திளைத்த நம் காதல்
மெய்யோடு மெய் மறந்து நின்றதெப்படி?

வாய் வார்த்தைகள் கூட 
வாக்கு என்று வாழும் எனக்கு
உன் பொய் வார்த்தைகள் 
மெய் என்று புரியாமல் போனதே....

எத்தனை நடிப்புகள்
எத்தனை ஏமாற்று வித்தைகள்

நேற்று அல்ல இன்றல்ல 
எத்தனை நாட்கள் என்பதை 
எழுத நாள் காட்டி கூட கிடைக்காதே...

உன் மீது கோபம் வந்தாலும்
என் மீதே பழி தீர்க்கிறேன்

திருப்பி தந்த பரிசை எதிர்பார்க்கவில்லை
என்றோ சொன்ன வார்த்தை கூட 
உனக்கு ஞாபகமில்லையா?

பொய்களில் திளைக்கும்
பெண்களின் காதல் 
மெய்யோடு போய்விடுகிறது.

காதல் மெய்யில் திளைக்கும் பொய்யே
ஆதலால் காதல் செய்யாதீர் 


Friday, June 03, 2011

சூப்பர் ஸ்டார் என்ன செய்கின்றார்

கடந்த ஒரு மாத காலமாகவே உடல் நலமில்லாமல் இருக்கும் தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் திரு ரஜினிகாந்த அவர்கள் எப்படி இருக்கின்றார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிராகவே உள்ளது.

சிங்கப்பூரில் அளிக்கப்பட்ட சிகிச்சையினால் தற்பொழுது நல்ல உடல் நல முன்னேற்றத்துடன் காணப்படுகின்றார் அதனால் அவரது கிட்னியின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.எனவே டயாலஸிஸ் நிற்த்தப்பட்டுள்ளது. அவரை சந்திக்க உடன் சென்ற உறவினர்கள் தவிர பிறருக்கு அனுமதி இல்லை.

மேலும் உடல் நலம் முழுவதும் சகஜ நிலைக்கு திரும்ப மேலதிக சிகிச்சைக்காக திரு ரஜினிகாந்த அவர்கள் ஒரு மாத காலம் அந்த மருத்துவமனையில் இருக்கப்போகின்றார். அவருடைய குடும்பதார்கள் ஒரு தற்போது இருந்து வரும் ஹோட்டலை காலி செய்து மருத்துவமனையின் எதிர் புறத்தில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருக்கின்றார்கள் என்று தெரிகிறது.

சூப்பர்ஸ்டார் முழுவதும் குணமாகி நலமுடன் நாடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்.

Thursday, May 05, 2011

எங்கேயும் காதல்

நடிப்பு : ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி, சுமன், ராஜூ சுந்தரம்
இசை : ஹாரீஸ்
இயக்கம் : பிரபு தேவா

இந்தியாவில் இருக்கும் மேற்கத்திய கலாச்சாரம் பிடித்த ஆணும் , பாரீஸீல் இருக்கும் இந்திய கலாச்சாரம் பிடிக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல்.

கமல்(ரவி) இந்திய பிசினஸ் மேன் வருடம் முழுவதும் உழைத்து ஒரு மாதம் பிரான்ஸில் ரெஸ்ட் எடுத்து அனுபவிக்க வரும் நபர். பெண் நண்பிகள் ஏராளம் காதல்னா வெறுப்பு. கயல் விழி(ஹன்சிஹா) பாரீஸீல் வளரும் இளம்பெண் இந்திய கலாச்சாரம் பிடிக்கும் ஒருவனுக்கு ஒருத்தி . கமலை கண்டவுடன் காதல் வருகிறது. கமலுக்கு அவருடைய ஒரு கேர்ள்பிரண்டால் ஏற்படும் ஆபத்தை தடுக்க முயற்சிக்கிறார். அங்கே சினேகம் ஆகும் நட்பு. ஹன்சிகாவுக்கு காதல் பொங்கி வழிய இவரே காதல்லாம் சுத்த ஹம்பக்னு பீட்டர் விட்டு கிளம்புகிறார் இந்தியாவுக்கு மீண்டும் பார்ட்டியில் சந்திக்கும் ஹன்சிகா தனக்கு பாய்பிரண்டுகள் நிறைய இருப்பது போல் காட்டி ரவியை பொறாமை பட வைக்கிறார். கடைசியில் பொய் என்று தெரிந்து விலகுகிறார். காதல் கை கூடியதா????

ரவி நல்லா டான்ஸ் ஆடுகிறார் என்ஞ்சாய் செய்கிறார். ஆனாலும் முகத்தில் ஒரு டல். கொடுக்கப்பட்ட வேலையை கரெக்ட்டா முடிக்கிறார்.

ஹன்சிகா அழகா இருக்கிறார். மாப்பிள்ளை படத்தைவிட செம க்யூட். ஆனாலும் ஏதோ வெள்ளைக்கார பெண் போன்ற தோற்றம் இருக்கிறது. முந்தைய படத்தைவிட இதில் நடிப்பு இன்னும் பெட்டர்.காதலிப்பதும் ஏமாறுவதும் நல்லாத்தான் இருக்கு. இவரை வச்சு கொஞ்சம் காமெடி பரவாயில்லை.

ரவியின் நண்பராக சில காட்சிகளில் தலைகாட்டும் ராஜூ சுந்தரம் சிரிப்பே வரலை சார்.

ஹன்சிகாவின் அப்பாவாக பிரைவேட் டிடெக்டிவ்வாக சுமன் ஏதோ வந்து போகிறார்.

படம் முழுவது எல்லா காட்சிகளிலும் ரவி, ஹன்சிகா அல்லது இருவரில் ஒருவர் கட்டாயம் உள்ளார்,

பிரபு தேவா எங்கேயும் காதல் படத்துக்கும் கொஞ்சம் கதை சொல்லவும் வருகிறார்.

படம் ரெம்ப சின்ன படம் 2 மணி நேரம் கூட இல்லை.

பாரீஸையும் இளம் யுவதிகளையும் அழகாக படம் பிடித்துள்ளனர், நல்ல கேமரா

ஹாரீஸ் இசையில் பாடல்கள் ஓக்கே பின்னனி இசை குறிப்பிடதகுந்தபடி இல்லை.

முழுக்க முழுக்க பாரீஸ் என்பதால் இருவரை மட்டும் வைத்து படத்தை முடித்துள்ளார். ஆனாலும் ஏதோ நாடகம் போலே போகிறது. பாடல்களும் அடிக்கடி வரும் தோற்றம் உள்ளது.

ஏதோ 90களின் ஹிந்தி படங்களை போல இருக்கிறது அதிலும் கடைசி க்ளைமாக்ஸ் அச்சு அசல் ஹிந்தி டைப். கொஞ்சம் கூட பொருந்தாத க்ளைமாக்ஸ் வேற யோசனையே இல்லையோ

பாடல்கள், பாரீஸ் அப்புறம் ஹன்சிகாவுக்காக பாக்கலாம்.

எங்கேயும் காதல் - ஏமாற்றம்

Tuesday, April 12, 2011

பண நாயகம்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா என்றாலே பழைய காலங்களில் வீதிக்கு வீதி சுவர்களை ஆக்கிரமிக்கும் சின்னங்களும், ஒவ்வொரு பகுதியில் கிளைச்செயலாளர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக 10-15 பேரோடு ஓட்டர் லிஸ்ட்டை எடுத்துக்கொண்டு அலைவார்கள். இது எல்லாம் தி.மு க்கு முந்திய காலம் அது என்ன ராசா தி.மு னு கேக்கலாம். வேற ஒன்னுமில்லை திருமங்கலம் தேர்தலுக்கு முந்தின காலம். திருமங்கலம் தேர்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் பணநாயகத்தை காட்டியது.

தி.மு காலம் முன்பு வரை தேர்தல் என்றால் கட்சி உறுப்பிணர்களுக்கு மட்டுமே பணப்புழக்கம் ப்ரியானிலாம் பழக்கம். தி.மு வில் முதல் முறையாக வாக்காளர்கள் பக்கா கவனிப்பிற்கு உள்ளானார்கள். வேளா வேளைக்கு சோறு வீதி வீதிக்கு பந்தல் வச்சு கறிச்சோறும் சாராயமும் பரிமாறப்பட்டதாய் கேள்வி. ஓட்டு இருக்கும் வீட்டிற்கு தலை எண்ணிக்கைக்கு ஏற்ப பக்காவாக பணம் சொளையா கெடைச்சதாகவும் கேள்வி. வீடு பூட்டியிருந்தாலும் கவர் உள்ளே விழுந்தது.

ஆங்... இந்த தேர்தலில் கூட இன்றைய காலையில் ஒரு செய்தி வீட்டில் ஆள் இல்லாத போதும் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட கவரில் தலைக்கு 500 வச்சு சொருகப்பட்டிருந்ததாய் கேட்டேன். ம்ம்ம்ம் என்ன ஒரு கவனிப்பு. தொகுதியில் குறைந்தது 1 லட்சம் ஓட்டுகளாவது இருக்கும் 1 ஓட்டுக்கு 500 என்றால் 5 கோடி அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இலவசங்கள் மனிதனை சோம்பேறி ஆக்கிவிடும், நமக்கு முன் பின் தெரியாதவர் பெரும் பாலும் உதவி புரிகையில் நம்மிடம் இருந்து பலனை எதிர்பார்ப்பர். ஒரு நாள் கூத்திறு பல கோடிகளை இறைக்கும் வேட்பாளர்கள் நம்ம வரிப்பணத்தை எப்படி லவட்டுவார்கள்.

இதில் ஆளும்/எதிர் கட்சி பாகுபாடு இல்லை வசதி உள்ளவன் அள்ளி வீசுறான்..

ஓட்டுப்போட்டு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்... யாரையுமே பிடிக்கலையா ‘ஓ’ போடுங்க தப்பு செய்தவங்களுக்கு சுளீர்னு உறைக்கும். கடமையை செய்ய தவறாதீர் பணத்திற்காக விலை போகாதீர் உங்களுக்கு இனாம் கொடுத்து பிச்சைக்காரனைப் போல மாற்றும் இந்த அவலம் நமக்கு தேவையில்லை. சிறந்த குடிமகனாகி நாட்டிற்கும் உங்கள் குழந்தைகளிற்கும் முன் உதாரணமாகுங்கள்.

தவறான பாதையை காட்டி விடாதீர்கள் வருங்கால சமுதாயத்திற்கு விரலில் மை இடும் முன்னே உங்கள் மீது கறை படிய விடாதீர்.

மையிட்ட கையும் சுத்தமாகிவிடும் ஆனால் உங்கள் மன சாட்சி....?

உழைத்து கிடைக்காத காசு பிச்சைக்கு சமம்...

பணநாயகம் ஒழிக , பார் போற்றும் தமிழனாய் தலை நிமிர்வோம்.

தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்கொரு குணம் உண்டு.

வாழ்க இந்தியா வளர்க நம் ஜனநாயகம்

பணநாயகம் அழித்து சனநாயகம் மீண்டும் தலைக்க குறைந்த பட்சம் ஓ வாச்சும் போடுங்க.

Friday, February 11, 2011

காதல்


தியானம் சென்றால்
மனம் ஒரு முகம் ஆகுமாம்
காதலித்து பாருங்கள்
ஒரு முகமே மனம் எங்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இன்னும் ஞாபகம் இருக்கிறது
அந்த மாலை நேரம்
ஓர் ஆண்டிற்குப் பிறகான சந்திப்பு

வந்தவுடன் கண் மூட சொன்னேன்
எரிப்பது போல் பார்த்துவிட்டு மூடினாய்
பரீட்சயமான உன் கரங்களை பற்றுகிறேன்
வெட்கத்தில் இன்னும் சிவக்கிறது உள்ளங்கை

உனக்கான என் முதல் பரிசாய்
உன் விரல்களில் நுழைக்கும் தருணம்
கண்களை திறக்க சொல்கின்றேன்

கையில் இருந்த வைரத்தை விட
உன் கண்ணில் ஒளி அதிகமடி
முதன் முதலாய் உனக்கு என்று தேடியது
உன்னிடம் தோன்றுத்தான் போனது

நானும் தோற்றுத்தான் போனேன்
எதை உனக்கு அளிப்பது என்று
தடுமாறிப்போனேன்

உன் முத்தங்களை விட
இந்த கல் என்ன பெரிதா?
கண் மூடச்சொல்லிவிட்டாய்?
தடுமாறாமல் கேட்டாய்

Wednesday, January 26, 2011

அகமும் புறமுமாய் நீ-5

இரவு சரியாக 11 மணிக்கு எஸ்.எம்.எஸ் பேசலாமா? என்று அவளிடம்

நானும் பேசலாமே என்று மறுமொழியிட அப்பொழுதுதான் அந்த உலக அதிசயம் நடந்தது அவளே அழைத்தால்.

ஆமா ஏதோ கவிதை சொன்னீங்களே என்னது?

இல்லை அது என்னது உனக்காக எழுதியது

இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை

ஒருமையில் வார்த்தைகள் விழ இது நடப்பது காபி ஷாப் மீட்டீங் முடிஞ்சு சரியா ஒரு மாதம் கழித்து. காபி ஷாபில் நடந்தது....

நீங்க என்ன லவ் பண்ணுறீங்களா?

முதல் கேள்வியிலே போட்டுத்தாக்கினாள் நான் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து கேள்விகள் தொடர

முதல் கேள்வி தொடங்கி கடைசி வரை ஆமாம் போட்டு வைத்தேன்

பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள்

நீங்க என்னை கல்யாணம் செய்யனும்னா நிறைய இழக்கனுமே? கொக்கி போட்டாள்

என்ன என்பது போல பார்த்தேன்?

இப்பொழுது வேண்டாம் பயந்துடுவீங்க பிறகு பேசலாம் அதைப்பற்றி என்றவள் உடனே கிளம்பி சென்றாள்.

சில பல சந்திப்புகளில் எங்கள் காதல் சந்திப்புகளில் கூட நிற்காத தொடர்வண்டியாய் சென்றது.

அவளது படிப்பும் முடியும் நேரம்.

அன்னைக்கு காபிஷாபில் சொன்னது ஞாபகம் இருக்கா?

என்ன டி?

நீங்க நிறைய விட்டுக்கொடுக்கனும்னு அய்யா மறந்துட்டீங்களா?

ஓ ஓ அதுவா ....

ம்....... எங்க வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க எனக்கு பதில் சொல்ல கூட தைரியம் வரமாட்டேங்குது,

நிறுத்தினாள் அவளே தொடரட்டும் என்று காத்திருந்தேன்

இருக்கீங்களா?

சொல்லுடா? இது நான்

இப்ப என்ன பண்ணனும் இதுவும் நான்

நீங்க உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்குகங்க எங்க வீட்ல பொண்ணு கேளுங்க

ஓக்கே என் சைட் நான் சரி பண்ணுறேன் உன் சைட் நீ மட்டும் தான் முடியும் நான் முயற்சி செய்து அவமானப்பட்டா என் வீட்ல என்னால ஒன்னும் செய்ய முடியாது

அப்ப என்னை மறந்துடுங்க என்றாள் வேகமாக.

என்ன பொண்ணுங்களோ ஒரு ஆண் ஒரு பெண்ணை தூக்கி எறிய பல நாட்கள் ஆகின்றது இப்படி பழகியவனை தூக்கி எறியும் வார்த்தை சில நொடியில் தோன்றியதில் நொறுங்கியவன் உடனே கால் கட் செய்துவிட்டேன்.

ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள் 50 கிட்ட இருக்கும் எடுக்கவே இல்லை. அந்த நேரத்தில் டொய்ங் டொய்ங் என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி ஒன்று வந்து விழுந்தது அவள் தான் அனுப்பியிருந்தாள்

எங்களுடைய பெர்சனல் கொஞ்சல்களில் ஆரம்பித்து ஒரு காதலன் வாய் திறக்க கூட முடியாமல் பாச மழை பொழிந்திருந்தாள் நானே போன் செய்து பேசும் பொழுது இரவு 2.30 ஆகியிருந்தது



Tuesday, January 18, 2011

அவளுக்கு ஒரு கடிதம்

கண்ணுக்குள் வந்து செல்லும்
கானல் நீராய் நீ இருக்க

தொட்டனைத்து நீ இட்ட சபதங்கள்
சம்பிரதாய பேச்சாக

ஏன் என்று காரணம் சொல்லக்கூட
விரும்பாமல் நீ இருக்க

உனக்கென வாழ்வேன் இல்லையேல்
என்றவளை காணவில்லை

எங்கேயும் தேடிப்பார்த்தேன்
என்னில் ஏதும் தவறா என்று

மென் தவறுகளின்றி வேறொன்றும் இல்லை
ஊடல் இல்லா காதல் எங்கேனும் உண்டா?

வாய்க்கு வந்த காரணங்களை வசை பாடிய
உன்னைக்கண்டு அழுவதா சிரிப்பதா

நித்தம் நித்தம் பேசிய தொலைபேசி கூட
கேலியாய் எனை பார்க்குதடி

மறப்பதற்கு மனது ஒன்றும் பட்ட மரம் அல்ல
உன்னால் நான் நிற்கின்றேன் கல் பட்ட மரமாய்

ஊரறிய உனக்கு நான் எனக்கு நீ என தெரியும்
உதறி தள்ளி ஒய்யாரமாய் நீ இருக்கிறாய்

கசங்கிய சேலையும் கால் கொலுசுமாய் எதிர்கால 
பேச்சுக்கள் கூட கசங்கி போனதடி

உனக்கு வேண்டியவற்றை நான் எப்பொழுதும் மறுத்ததில்லை
என்னிடமே கேட்டிருக்கலாமே?

விருப்பமில்லை விருப்பமில்லை என்று அலற்றி 
காரியம் சாதித்துக்கொண்டாய் 

கனவோடு பேசிய பேச்சுக்கள் நித்தம்
தூக்கத்தை கெடுக்கின்றன

ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட 
நிம்மதியாய் நான் இருந்திருப்பேன்

உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டாய்
எனையும் கொன்றுவிட்டுச் சென்றிருக்கலாமே

கல்லால் ஆனதா உனது இதயம் 
கண்ணீரோடு கானல் ஆகின்றேன்

Friday, October 01, 2010

எந்திரன் - விமர்சனம்

நடிகர்கள் : ரஜினி, ஐஸ்வர்யா ராய்
இசை : ஏ,ஆர், ரஹ்மான்
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

ஆராய்ச்சியாளர் வசீகரன் 10 ஆண்டுகள் பாடுபட்டு ஒரு ரோபோவை (சிட்டி)வடிவமைக்கிறார். அதற்கு அவருடைய உருவத்தையே கொடுக்கிறார். இவரின் வளர்ச்சி அவருடைய குருநாதரான வில்லனுக்கு பிடிக்கவில்லை. ரஜினியை தூண்டிவிட்டு அதற்கு மனித குணநலன்களான உணர்வுகள், ஆசைகள் எல்லாம் உருவாக்க வைக்கிறார். உணர்வுகள் உண்டாகும் சகல பலம் பொருந்திய ரோபோவை போர்முனைக்கு பயன்படுத்த ஆசைப்படுகிறார் வசீகரன். ஆனால் எதிரி நாடுகளிடம் விற்க ஆசைப்படுகிறார் வில்லன். வசீகரனின் காதலி சனா (ஐஸ்) மீது ரோபோவிற்கு காதல் பொங்கி வழிய அதை அழிக்கின்றார் வசீ. மீண்டும் அதை உருவாக்கி அதனை அழிவுப்பாதைக்கு திருப்புகிறார் வில்லன். காதல் பித்து பிடிக்கும் ரோபோ என்னவெல்லாம் செய்கிறது ஒரு பெண்ணிற்காக என்பதே கதை. இறுதி வெற்றி யாருக்கு மனிதனா? ரோபோவா?

ரஜினிக்கு சயிண்டிஸ்ட் வேடம் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் ஆள் ரெம்ப ஸ்மாட்ர்ட் இளமையாக இருக்கிறார்.  அவருடைய உதவியாளர்களா சந்தாணம் மற்றும் கருணாஸ் சும்மா மொக்கை போடுகின்றனர். சயிண்டிஸ்டுக்கு படத்தில் பாடல் பாடுவதை தவிர வேறு ஹீரோயிசம் இல்லை. ரெம்ப சாதுவாக காட்சிகள் உள்ளது. அவர் உருவாக்கும் ரோபோ ரஜினி செம ஸ்மார்ட். மனுசன் பின்னுகிறார். நல்ல உடல் மொழி லாவகமான நடிப்பு என சகலமும் ஸ்கோர் செய்கிறார் ரோபோ ரஜினி. விஞ்ஞானியின் காதலியாக ஐஸ் , 36 வயசிலும் நல்லாத்தான் இருக்கார். நல்லா நடிக்கவும் செய்கிறார். ஆனாலும் நேட்டிவிட்டு ஒட்டவில்லை.

முதல் பாதியில் விஞ்ஞானியின் காதலும் , ரோபோவின் அட்டகாசங்களுமாக போகிறது. இரண்டாம்பாதியில் ரோபோ வில்லனாகி ஐஸை கடத்தை கொஞ்சம் சூடு பிடிக்கிறது, ஆனாலும் இழுவையான பேசும் காட்சி அமைப்புகள் செம போர் டயலாக் ரெம்ப போர். ஆத்தோ ஆத்துனு ஆத்துகின்றார்கள் ஆளாளுக்கு.

இரண்டாம் பாதியில் கடைசி 30 நிமிடங்கள் உச்சகட்ட கிராபிக்ஸ் அதுவே கொஞ்சம் திகட்டுகிறது எங்கு பார்த்தாலும் ரஜினி. மேலும் டெக்னிக்கல் வசனகங்கள் பெரும்பாலும் வலுவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கிறது சுஜாதா இல்லாதது அப்பட்டமாக தெரிகிறது.

ரோபோவின் சாகசங்களும் காட்சிகளும் நல்ல வடிவமைக்கு. இறுதிக்காட்சி கிராபிக்ஸ்களும் கலக்கல். டிரைலரில் பார்த்த சீன்களே படத்தில் பார்க்கும் பொழுது வேறு பரிணாமத்தையும் நம்முடைய காட்சிப்பிழையையும் சுட்டிக்காட்டுகிறது.

ஏ.ஆர்.ஆர் அசத்திருக்கார். கிராபிக்ஸ் டீம் நல்ல திறமையான வடிவமைப்புகளில் பின்னிருக்காங்க. ரத்னவேலுவின் கேமரா அருமை. ரோபோவை டிஸ்மாண்டலிங் பண்ணும் போது நல்லா இருக்கு இரண்டு தடவையும்.

இறுதிகாட்சிகளில் எங்கு நோக்கினும் ரஜினி என்பதால் ஆர்வம் ஏற்பட்டு பின்பு அதுவே சலிப்பை கொடுக்கிறது.

ரயில் காட்சியும் இறுதிக்காட்சிய்யும் தவிர பெரிய சுவாரஸ்யம் இல்லை. ரஜினி ரசிகன் எதிர்ப்பார்க்கும் ஹீரோயிச காட்சிகளும் இல்லை.

ரோபோ திரையரங்குகளில் மட்டுமே ரசித்து காண முடியும்.

ரோபோ போரோ என்றே தோன்றுகிறது.

Saturday, September 18, 2010

எந்திரன் ரிலீஸ் தேதி

சூப்பர் ஸ்டார் மற்றும் ஐஸ் நடிக்க, சங்கரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் எந்திரன் வரும் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி 3 கெட்டப்புகளில் தோன்றுகிறார். சிவாஜில் மொட்டை போட்ட ரஜினி வருவது போல இதிலும் கடைசி 45 நிமிடங்கள் வேறு கெட்டப்பில் வருகிறார்.

1 ஆம் தேதி பார்ப்போம் விமர்சனங்களுக்கு....

Friday, August 20, 2010

நான் மகான் அல்ல விமர்சனம்

நடிப்பு: கார்த்தி , காஜல் அகர்வால் , ஜெயபிரகாஷ்
இயக்கம் : சுசீந்திரன்
இசை : யுவன்

போதையில் தடம் மாறிப்போகும் கல்லூரி மாணவர்கள் செய்யும் இரட்டைக்கொலைக்கு சாட்சியான நாயகனின் தந்தையை மாணவர்களே போட்டுத்தள்ள மாணவர்களை கருவறுக்க நாயகன் செல்கிறார். என்ன முடிவு என்பதே கதை.

சுசீந்திரன் முதல் படமாகிய வெண்ணிலா கபடிக்குழுவிற்கு பிறகு இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நகரத்து கதைக்களம். நாயகன் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஜாலியான இளைஞன் ஜீவாவாக கார்த்தி. அவர் ஆரம்பம் முதல் இடைவேளை செய்யும் சேட்டைகளும் , நையாண்டிகளும் இளைஞர்களின் வாழ்க்கையை கண் முன் நகர்த்துகிறது அதுவே முதல் பாதி விறுவிறுப்புக்கு உதவி செய்கிறது. ஆரம்ப காட்சிகளிலே நாயகியை காட்டிவிடுவதால் ஏதோ பெருசா கதைக்களம் இருக்கும் என்று தோன்றியது ஏமாற்றமே.கார்த்தி நன்றாக நடிக்கிறார், சண்டடை போடுகிறார் அதைவிட பருத்திவீரனில் இருந்து நான் மகான் அல்ல வரைக்கும் தொடரும் நக்கலும் நையாண்டியுமே அவருக்கு பலம். இயல்பாக பொருந்துகிறது அவருக்கு.

மிடில் க்ளாஸ் குடும்ப பிண்ணனி , கால் டாக்சி டிரைவர் மற்றும் நல்ல அப்பாவாக ஜெயபிரகாஷ் கிடைச்ச சின்ன கேரக்டரிலும் ஸ்கோர் செய்கிறார். காஜல் அகர்வால் ஒரு டூயட் ஒரு ஆரம்ப பாடலுக்கு பயன்பட்டிருக்கிறார் இடைவேளைக்கு அப்புறம் வரவே மாட்டேங்குறார். பொண்ணுக்கு நடிக்க ஸ்கோப் இல்லாத கேரக்டர். அழகாக இருப்பதால் தப்பிக்கிறார். இடைவேளைக்கு பிறகு என்ன ஆனார் எங்கே போனார் என்கிற விவரம் இல்லை.80ஸ் படங்கள் போல கடைசியில் எண்ட் கார்ட் போடும் போதாச்சும் காட்டிருக்கலாம்.

காமெடிக்கு கார்த்தியுடன் உறுதுணையாக இருப்பவர் வெண்ணிலா கபடிக்குழுவில் 50 புரோட்டா சாப்பிடுவாரே அவர்தான். இயல்பான பேச்சு மற்றும் உடல் மொழியால் கவர்கிறார்.

ஐந்து பசங்க சேர்ந்து சென்னையின் ஒதுக்குப்புற கடற்கரை ஏரியாவிற்கு வரும் காதலர்களை மிரட்டி அடித்து பெண்களை கவர்கின்றனர். காம வெறியில்  நண்பனின் காதலியையும் , நண்பனையும் போட்டுத்தள்ளுகின்றனர். விடலை பசங்கள் தான் என்றாலும் இருவர் நடிப்பில் கவர்கின்றனர். அந்த தாடிக்கார பையனும் , பரட்டைத்தலைப்பையனும்.

நாயகனுக்கு காமெடி தவிர ஸ்கோப் செய்யும் காட்சிகளும் இல்லை என்பதால் அடக்கி வாசித்து உள்ளார். இறுதி சண்டையில் சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறார். காஜல் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றதும் நேரே வீட்டிற்கே சென்று காதலை காஜலின் தந்தையிடம் சொல்வது, காஜலை கரெக்ட் செய்ய பொய்யான காதல் தோல்வியை சொல்வது, வேக்கிள் ரெக்கவரில வேலைக்கு சேர்ந்து மேனஜரையும் அவரது மனைவியையும் சண்டை போட வைப்பது போன்று நகைச்சுவை காட்சிகளே அதிகம் அதற்காகவே படம் பாக்கலாம். முதல் பாதியில் நிறைய டைமிங் காமெடிகள்.

இரண்டாம் பாதியில் படம் பொசுக்குனு முடியுற மாதிரி இருக்கும். மொத்தம் 2 மணி நேரமே .

பாடல்களிலும் , பிஜிஎம்மிலும் யுவன் ராஜ்ஜியம்.

வா வா நிலவை, பாடல் அருமை. ஒரே ஒரு டூயட் அதுவும் அருமை .

நல்ல நகைச்சுவை கலந்த திரைக்கதை , இசை மற்றும் கார்த்தியின் ஈடுபாடு படத்தை காப்பாற்றும்.

நான் மாகன் அல்ல டைட்டிலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.

Friday, August 06, 2010

அடோப் என்கோர் சிஎஸ் டிவிடி மற்றும் ப்ளூரே உருவாக்கம் பகுதி-2

சென்ற பகுதியில் முன்னுரை பார்த்தோம் இந்த பகுதியில் மென்பொருள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

அடோப் என்கோரினை திறந்தம் கீழ்வரும் திரை தோன்றும்


மேலே உள்ள படத்தில் காணுங்கள் இது தான் முதல் திரை தோன்றும்

இங்கு
1. சமீபத்திய புராஜக்ட்டுகளை காட்டும்
2.புதிய புராஜக்ட் தொடங்க
3.பழைய புராஜக்ட்டுகளை திறக்க

இதில் புதியதை தேர்வு செய்தால் பின்வரும் திரை தோன்றும்.

புதிய புராஜக்ட்டுக்கான செட்டிங்க் திரை . இங்கே புராஜக்ட்டின் பெயர், சேமிக்க வேண்டிய இடம் மற்றும் புராஜக்ட்டின் வகை.  அதாவது ப்ளூரே / டிவிடி. மேலும் வீடியோவின் பண்பு அதாவது pal / ntsc  வகை. கொடுத்து ஓக்கே கொடுங்கள் பின்வரும் திரை தோன்றும்.


மேலே உள்ள திரைதான் வேலை செய்யக்கூடிய முழுத்திரை அதிலே சில குறிப்புகளை தந்துள்ளேன்.

இடது புறம் புராஜக்ட் என்னும் டேபின் கீழ் நாம் நம்முடைய புராஜக்ட்டுக்கு தேவையான வீடியோ/ஆடியோ மெனுக்களை இணைத்து வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு இனைக்கப்பட்ட புராஜக்ட்டின் சொத்துக்கள்(அசெட்) இங்கே காட்டப்படும்

அதற்கு கீழே டைம் லைன் எனப்படும் பகுதி இங்கே அசெட்டில் இணைத்த வீடியோ / ஆடியோவினைக்கொண்டு ஒரு டைம்லைன் உருவாக்கலாம். இதே போல புராஜக்ட்டின் கொள்ளளவிற்கு ஏற்ற எத்தனை டைம் லைன்களையும் உருவாக்கி கொள்ளலாம்.

ஒரு படத்திற்கு ஒரு டைம் லைன் எனும் விகிதத்தில்

ப்ரிவியூ ஸ்க்ரீன் எனும் இடத்தில் டைம் லைனை இயக்கி பார்க்கலாம்.

ப்ராப்பர்ட்டி விண்டோவில் மேற்பகுதியில் டிஸ்க் என்று உள்ளது எனவே இந்த பண்புகள் பகுதி ஒரு டிவிடி புராஜக்ட்டிற்கு உரிய பண்புகள்
அதாவது first play எது title பட்டனை ரிமோட்டில் அழுத்தினால் எந்த மெனு தோன்ற வேண்டும். போன்றவற்றை தீர்மானிப்பது.

அதற்கு கீழே லேயர் எனும் பகுதியில் நாம் இணைத்துள்ள போட்டோஷாப் மெனுக்களின் லேயர்கள் காட்டப்படும். அதாவது குறிப்பிட்ட மெனுவினை தேர்வு செய்தால் அதனுடைய லேயர்கள் காட்டப்படும்.

இந்த ப்ராப்பர்ட்டி விண்டோ நாம் தேர்வு செய்யும் ஒவ்வொரு அசெட்டுக்கும் தனித்தனியானது. எனவே தேர்வு செய்யும் அசெட்டை பொருத்து அதில் உள்ள பகுதி குறிப்புகள்(ப்ராப்பர்ட்டியின் வகைகள்) காட்டப்படும்.

புராஜக்ட்டில் அசெட்டுகளை இணைக்க மேலே படத்தில் காட்டியுள்ள படி அந்த பகுதியில் ரைட் க்ளிக் செய்யவும் தோன்றும் மெனுவில் இம்ப்போர்ட் அஸ் என்பதில் தேவையானதை தேர்வு செய்து இணைக்கலாம்
1.அசெட் - வீடியோ/ஆடியோ
2.மெனு - போட்டோஷாப் வகை பைல்
3.பாப்-அப் மெனு - ப்ளுரேவிற்கு உரியது
4.டைம்லைன் - வீடியோ/ஆடியோவை இணைத்து செய்யப்படும் டைம்லைன்
5.ஸ்டைட் ஷோ - ஸ்லைட் ஷோக்களை கொண்டு வரலாம்.

Saturday, July 17, 2010

அடோப் என்கோர் சிஎஸ் 4 - டிவிடி மற்றும் ப்ளூரே டிஸ்க் உருவாக்கம் பகுதி -01

நண்பர்களே,

வணக்கம், ஏற்கனவே தொழில் முறை டிவிடி உருவாக்கத்தில் டிவிடி மேஸ்ட்ரோ ஸ்ப்ரூஸை பற்றி விரிவாக விளக்கியுள்ளேன். இங்கே மீண்டும் ஒரு டிவிடி/ப்ளூரே டிஸ்க் உருவாக்கம் பற்றி விளக்க போகின்றேன் . இப்பொழுது பயன்படுத்தப்போகும் மென்பொருள் இன்றைய நிலவரத்தில் முன்னனியில் இருக்கும் அடோப் என்கோர் டிவிடி . இதில் தற்போதைய வெர்சன் சிஎஸ்5. என்னிடம் இருப்பது சிஎஸ் 4 அதனை பின்பற்றி விளக்குகிறேன். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

இணையத்தில் தேடியதில் இது தான் கிடைத்தது சைனிஸ் எழுத்துக்களை கண்டு மிரள வேண்டாம் என்னிடம் உள்ள வெர்சன் ஆங்கிலமே அதனை கொண்டே மேலதிக விவரங்கள் தரப்போகிறேன்.

இது அடோப் நிறுவனத்தில் மென்பொருள் பெரும்பாலும் ப்ரீமியர் எனும் வீடியோ எடிட்டிங் மென்பொருளுடன் சேர்ந்தே வரும். இதனுடைய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால்

*எளிதான அணுகுமுறை மேஸ்ட்ரோ போல கடினம் இல்லை
*மிகவும் வேகமான டிவிடி பில்ட்
*தவறுகளை டிவிடி பில்ட் செய்யும் முன்னே கண்டுபிடித்து சரிசெய்துகொள்ளலாம்.
*ப்ளூ ரே டிஸ்க் உருவாக்கலாம்
*ஏசி3 ,டிடிஎஸ் , பிசிஎம் வேவ் போன்ற ஆடியோ பார்மட்டுகளையும் ஏற்றுக்கொள்ளும்
*சப்டைட்டில் சேர்க்கலாம்
*மெனுவினை நேரடியாக போட்டோஷாப்பில் இருந்து லேயர்களாக கொண்டு வந்து இங்கு சேர்க்கலாம்
*லேயராக இருப்பதால் பட்டன்கள் அமைப்பு எளிதாகிறது.
*ப்லோ சார்ட் வடிவில் இணைப்புகள் காட்டப்படுதால் தவறுகளை கண்டுபிடிக்க எளிதாக உள்ளது
*மென்பொருளிலே டிவிடி/ப்ளூரே பர்ன் செய்யும் வசதி
*அப்டேட் உள்ளது, மிகவும் எளிதான் ஹெல்ப் பிடிஎஃப் பார்மட் இணையத்தில் அவர்களுடைய அகப்பக்கத்திலே இருக்கிறது.

குறைகள்:

*ஸ்க்ரிப்ட் வகை சப்டைட்டில் பார்மெட் மட்டுமே சப்போர்ட் செய்கிறது
*சில வகையான ப்ளேயர்களில் ஆடியோ லாங்குவேஜ் சரியாக காண்பிப்பதில்லை
*டிவிடி 9 க்குரிய டபுள் லேயர் ப்ரேக் எனும் ஆப்சனை பில்ட் நேரத்தில் வைத்திருப்பது சரியாக இல்லை.
*ஒரு முறை இணைத்த பைலை மீண்டும் இணைக்கையில் முழுவதும் செக் செய்கிறது ரெபரன்ஸ் பைல் வைத்துக்கொள்வதில்லை.
*புராஜக்ட்டில் assets இனைக்கும் பொழுது அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

அடுத்த பகுதியில் இருந்து என்கோரை பிரிச்சு மேயலாம்.

Friday, February 26, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்

நடிப்பு : சிம்பு , த்ரிஷா மற்றும் சிலர்
இயக்கம் : கௌதம் வாசுதேவ மேனன்
இசை :ஏ.ஆர்.ரஹ்மான்

த்ரிஷாவின் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் படம் ஆரம்பிக்கிறது. சிம்புவின் பார்வையில் படம் சொல்லப்படுகிறது.

கார்த்திக்(சிம்பு) மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் முடித்து சினிமா ஆசையில் இயக்குநர் ஆக வேண்டும் என்று கனவோடு இருப்பவர். போலரிஸில் மென்பொருள் பணியில் இருக்கும் ஜெஸ்ஸி(த்ரிஷா) மலையாள கிறிஸ்துவக்குடும்ப பெண். ஜெஸ்ஸியின் வீட்டின் கீழ்த்தளத்தில் குடிவருகிறார்கள் சிம்பு குடும்பத்தினர்.

அங்கு த்ரிஷாவை கண்டவுடன் காதல் கொள்கிறார். அதை வெளிப்படுத்த துடிக்கிறார். சில இடைஞ்சல்கள் த்ரிஷா சிம்புவை விட ஒரு வயது மூத்தவர்,த்ரிஷாவின் அப்பாவிற்கு தன் மகளை ஒரு கிறிஸ்துவப்பையனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.

இவையெல்லாம் எடுத்துச்சொல்லியும் சிம்பு காதலில் உறுதியாக இருக்கிறார். த்ரிஷாவை தேடி கேரளா வரைக்கும் செல்கிறார். அந்த உருகலில் த்ரிஷா காதல் கொள்கிறார் ஆனால் வெளிப்படுத்த மறுக்கிறார். இந்த காதலினால் வலி தான் அதிகமாம் எனவே வேண்டாம் என்று மறுக்கிறார்.

இவர்களின் பழக்கம் த்ரிஷாவின் அண்ணனுக்கு தெரியவர அது கைகலப்பில் முடிய இரு குடும்பங்களும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. அப்பொழுது தான் த்ரிஷா தன் காதலை வெளிப்படுத்துகிறார் கோபத்தில்.


பெண்களுக்கே (காதலில்)ஏற்படும் முட்டாள் தனமான கோபத்தால் த்ரிஷா சிம்புவை பிரிகிறார்.

த்ரிஷாவை பிரிந்த வலியில் இருக்கும் சிம்பு தனது காதல் கதையே சினிமாவக எடுக்கிறார்.  படப்பிடிப்பின் போது த்ரிஷாவை சந்திக்கிறார். த்ரிஷாவிற்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்தது சிம்பு , த்ரிஷா கல்யாணம் செய்துகொண்டு முதல் படமும் வெளியாகிறது. சிம்பு-த்ரிஷா என்ன ஆனார்கள்.....

க்ளைமாக்ஸ் இயக்குநரின் , காதலியின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதால் இரட்டை க்ளைமாக்ஸ் போல தெரியும் ஆனாலும் நல்ல க்ளைமாக்ஸ். வித்தியாசம் தான் ஆண்டி க்ளைமாக்ஸ் என்றாலும்.

சிம்பு அடக்க ஒடுக்கமாக நடித்துள்ளார் கொஞ்சம் ஸ்மார்டாக இருக்கிறார், சாதரண மிடில் க்ளாஸ் வாலிபனாகவே வாழ்ந்துள்ளார். த்ரிஷா நிஜமாகவே கனவு தேவதை தான் த்ரிஷாவை இவ்வளவு அழகாக யாரும் காட்ட முடியாது. சிம்பு கூட இருக்கும் நண்பராக வரும் நபர் பெயர் தெரியவில்லை ஆனால் படத்தில் அவர் காக்க காக்க கேமரா மேன் கணேஷ் என்று காட்டப்படுகிறார்.

சிம்பு - த்ரிஷா - கணேஷ் இந்த மூவர் மட்டுமே படம் முழுவதும் வியாப்பித்துள்ளனர். வேறு சில நடிகர்கள் இருந்தாலும் சில காட்சிகள் மட்டுமே. சிம்புவின் ப்ரண்ட்ஸ் வட்டம் என்று தனிப்பட்டு காட்டப்படவில்லை என்பதால் சிறிது நகைச்சுவை தேக்கமே வாரணம் ஆயிரம் போல்.

சிம்பு - கணேஷ் த்ரிஷாவை தேடி கேரளா போவதும் த்ரிஷாவின் கல்யாணத்திற்கு போவதும் நல்ல காமெடி.

முதல் பாதி நன்றாக போகிறது த்ரிஷா பிரிந்து சென்ற பின்னர் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு. சினிமாத்தனமான பில்டப் இல்லாத காதல் காட்சிகளும், காதல் பிரிவும். க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் என்றாலும் ரசிக்க முடிகிறது. காதல் பிரிவை கொடுமையாக சித்தரித்த தமிழ் சினிமாவில் இந்த நடைமுறை காதல் பிரிவும் வித்தியாசமே.

பாடல்களில் ஏ.ஆர்.ஆர் பின்னிருக்கார். பிஜிஎம் ஏனோ ஆங்கில பாடல்களின் தொகுப்பு போலவே இருக்கிறது. பாடல்கள் அருமையோ அருமை...

பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்ப்.

கேமரா நன்றாக கையாண்டுள்ளார். நிறைய க்ளோசப் ஷாட்டுகள் மூலம் த்ரிஷாவை(பெண்களுக்கு சிம்பு) ரசித்து ஏற்க வைத்துள்ளார்.

எடிட்டிங் ஆண்டனி சொல்லவா வேணும் நல்லாவே இருக்கு கேரள படகு பயணத்தில் கேமரா பயணிக்க அந்த தண்ணீரிலே பெயர் போடப்படுவது அழகு.

கௌதம் சொந்த கதையை படமாக்கிருப்பாரோனு தோனுது. நாகரீகமான மெச்சூரானா , நடுத்தர குடும்பத்து காதல். ஆபாசம் இல்லா அநாகரிகம் இல்லா காட்சிகள் குடும்பத்துடன் சென்று பார்க்கவைக்கும் முகம் சுழிக்க வைக்கா காட்சிகள். இந்த முறையை தன்படங்களில் கௌதம் எப்பொழுதும் பின்பற்றுகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா - தேவதையின் வெளிச்சம்

நண்பர்கள் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Monday, February 08, 2010

ரசித்து பார்க்கும் 200 டாலர் கொலை

சீனாவில் உள்ள ஒரு வனப்பகுதி மிருககாட்சி நிலையத்தில் பின்வரும் கொடுமை நடக்கிறதாம். ஒரு மாட்டை 200 டாலருக்கு வாங்கி இந்த கொலையை ரசிக்கின்றனராம் வெளிநாட்டினர்.














மனித மனத்தின் ரசிப்புத்தன்மை எங்கேயோ போயிடுச்சு....

Thursday, February 04, 2010

அசல் - பழைய படங்களின் நகல்


நடிப்பு: அஜித் , பிரபு , சமீரா ரெட்டி ,  பாவனா , சுரேஷ் , யூகி சேது, சம்பத் , ராஜீவ் கிருஷ்ணா.
இசை : பரத்வாஜ்
இயக்கம் : சரண்
தயாரிப்பு : சிவாஜி பிலிம்ஸ்

கதை:

ப்ரான்ஸில் வசிக்கும் ஜீவானந்ததின்(அப்பா அஜீத்) மனைவியின் மகன்களுக்கும் , அவருடைய இல்லீகல் மனைவியின் மகனுக்கும்(மற்றொரு அஜீத்) நடக்கும் போட்டியில் யார் அசல் வாரிசாக இறுதியில் ஜெயிக்கிறார்கள் என்பதே.

ஜீவானந்தம் பல்வேறு நாடுகளுக்கு சட்டப்படி ஆயுதம் ஏற்றுமதி செய்யும் யுரோசியா எனும் நிறுவனத்தை நடத்துகின்றார் அவரது மகன்களாக சம்பத் மற்றும் ராஜூவ் கிருஷ்ணா. அவரது மற்றொரு மகன் சிவாவாக மற்றொரு அஜீத். ஜீவானந்தம் , சிவாவை நம்பி மட்டுமே பொறுப்புகள் கொடுக்க மிச்ச இரண்டு மகன்களுக்கும் கோபம். ஜீவானந்திற்கு பிடிக்காத இல்லீகல் ஆயுத பிசினஸ் செய்ய முற்படுகின்றனர் இருவரும். இந்நிலையில்  ஜீவானந்தம் மகன்களால் கொல்லப்படுகிறார். ஆயூத கடத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக ராஜீவ் கிருஷ்ணாவை மும்பையில் இருக்கும் கும்பல் கடத்துகிறது. அவரை விடுவிக்க அஜீத் மும்பை பயனமாகிறார். அவருடன் அவருடைய உதவியாளர் சமீராவும் மும்பை செல்கிறார். சமீராவுக்கு அஜித் மேல் காதல்.

மும்பையில் ஜீவானந்ததின் நண்பரான பிரபுவின் பாதுகாப்பில் இருக்கின்றனர். பிரபுவிடம் வேலை பார்க்கும் பாவனாவும் கண்டவுடன் காதல் கொள்கிறார். மேலும் பிரபுவிடம் வேலைபார்க்கும் டான் சமோஷா பேரைப்படித்தாலே காமெடி பீஸூனு தெரியுது தானே ஆமாம் கதையின் சொந்தக்காரரான யூகி சேது. அவருக்கு இரண்டு அடிப்பொடிகள் ஜீரா , சட்னி என்ற நாமகரணத்துடன்.
இவர்கள் செய்யும் சேட்டைகள் சிறிது சிரிப்பை வரவழைக்கின்றன.

இடையே பாவனா இரண்டு டூயட்டும், சமீரா ஒரு டூயட்டும் முடிக்கின்றனர். மும்பை கும்பலில் இருந்து ராஜீவ் கிருஷ்ணாவை மீட்டும் திரும்பும் போது அஜீத்தை போட்டு தள்ளுகின்றனர் ராஜீவும், சம்பத்தும். போட்டாச்சு இண்டர்வெல்.

பேக் டூ பாரீஸ் ஏன் அஜித்தை  கொலை செய்ய முயற்சித்தார்கள்? அவர்களை அஜீத் எப்படி பழி வாங்கினார் என்பது தான் மிச்ச சொச்சம்.

வழக்கமான ப்ழைய காலத்து காட்சி அமைப்புகள். மும்பை என்று சொல்லிவிட்டு அதைக்கூட மலேசியாவில் படமாக்கியுள்ளனர். பாரீஸையும் அறிமுக கேமராமேன் அற்புதமாக படமாக்கியுள்ளார். வில்லன் போலீஸாக வரும் சுரேஷ்(பழைய நதியா சுரேஸே தான்) கடைசியில் திருந்துவது அக்மார்க் தமிழ் சினிமா.

சமீரா, பாவனா முன்னவர் குதிரை பின்னவர் மான் குட்டி. ஆனாலும் மான் மனதில் ஒட்டிக்கொள்கிறது. அசடாக நடித்துள்ளார் பாவனா.

இசை பரத்வாஜ் இன்னும் அப்படியே தூங்கிகிட்டு இருக்கார். ஒன்னுமே சரியில்லை பிஜிஎமெல்லாம். பாட்டு 2-3 தேறுது.

ஆண்டனியின் படத்தொகுப்பு நல்லா இருக்கு.

சரன் இனிமேலாச்சும் பழைய கதை, பழைய சீன்கள் , பழைய திரைக்கதையை விடுங்க ப்ளீஸ். சரனும் பரத்வாஜ்ஜூம் கொஞ்சம் இல்லை இல்லை நிறைய மாறனும். ஜெயித்த கூட்டணி என்பதற்காக ஜெயித்த கதைகளையும் காட்சி அமைப்புகளையும் அடுக்குவது ஆவ்வ்வ்வ் சொல்ல வைக்குது. காட்சிகள் அனைத்தும் முன் கூட்டியே யூகிக்க வைக்கின்றன.

அசல் பழைய காட்சிகளின் நகல்

Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன்

இந்த திரைப்படத்தின் விமர்சனம் ஏற்கனவே நிறைய தளங்களில் அலசி அடித்துப்போடப்பட்டிருக்கு இருந்தாலும் எனக்கும் எழுத கிடைத்த ஒரு வாய்ப்பாக விமர்சனம் செய்கின்றேன். நேரம் இல்லாத காரணத்தால் இந்த தாமத விமர்சனம்.
நடிப்பு: ரீமாசென் , கார்த்தி ,ஆண்ட்ரியா மற்றும் மிகப்பெரிய கூட்டமே இருக்கிறார்கள்  
இயக்கம் : செல்வராகவன்  
இசை : ஜிவி பிரகாஷ்  
தயாரிப்பு : ரவீந்திரன்  


தெருக்கூத்தில் ஆரம்பிக்கிறது கதை 1279 ல் சோழப்பேரரசு , பாண்டிய பேரரசுவிடம் வீழ்வதாக காட்டப்படுகிறது. அந்த சமயத்தில் சோழர்களின் வாரிசை காப்பாற்ற ஒரு கூட்டமாக சோழர்கள் வெளியேறுகிறார்கள் செல்லும் பொழுது பாண்டியர்களிடமிருந்து கைபற்றிய பாண்டியர்களின் குல தெய்வ சிலையை கொண்டு செல்கின்றனர். செல்லும் சோழர்கள் தென்கிழக்கே வியாட்நாம் அருகே உள்ள ஒரு தீவில் இருப்பதாக தெரிகிறது ஆனால் அவர்களை யாரும் எளிதில் சென்று சேரா வண்ணம் 7 வகையான ஆபத்தினை உருவாக்கி வைத்து விட்டு செல்கின்றனர் சோழர்கள். தூது வரும் வரை அந்த தீவிலே காத்திருக்க உத்தரவு. 


தற்காலத்தில் அந்த சோழ இனத்தவரை தேடி ஆராய்ச்சியாளர்களின் பயணம் இருக்கிறது அதில் காணாமல் போன பிரதாப்போத்தன் ஆண்ட்ரியாவின் தந்தை. ஆண்டிரியாவும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்ச்சியாளர். ரீமா சென் என்னவா இருக்காருனு சொல்லப்படவில்லை அவர் தலைமையில் ஒரு குழு அந்த இளவரசன் வாழ்ந்த இடத்தை காண செல்கிறது. அந்த குழுவில் ஆண்டிரியாவும் இணைகிறார். இவர்கள் குழுவிற்கு உதவியாக எடுபிடி வேலை செய்யும் குழுவின் தலைவனாக கார்த்தி. கார்த்தி ஒரு எம்ஜிஆர் ரசிகர் என்று காட்டப்படுகிறது. ஆரம்ப காட்சிகளில் பின்புலத்தில் ஒரே எம்ஜிஆர் பாடல்களே ஒலிக்கிறது.  


கார்த்தி சவுண்ட் விடுவதும் , சைட் அடிப்பதுமே முழு நேரமாக செய்கிறார். அதிலும் ரீமா/ஆண்ட்ரியாவினை பார்க்கும் போது அவரின் பார்வையையே சென்சார் செய்யலாம் எனும் அளவிற்கு இருக்கிறது. 




முதல் ஆபத்து கடலில் தோன்றும் ஒரு வித்தியாசமான பிராணி(?) யால் அதில் சிலர் இறக்கின்றனர்.  


இரண்டாவது ஆபத்து செவ்விந்தியர்களால் அவர்களையும் சுட்டு சாய்க்கின்றனர் அதிகமான ரத்தம் இந்த காட்சிகளில் . இங்கே இந்த காட்சியை 5 நிமிடம் கூட இல்லாமல் சுத்தமாக வெட்டி விட்டனர் சென்சாரில் ஆனாலும் பார்த்துட்டோம்ல.  


மூன்றாவது ஆபத்து தங்குமிடத்தில் ஏராளமான பாம்புகள் படையெடுத்து நாசம் செய்கிறது. இந்த இடத்தில் தப்பிக்கும் முயற்சியில் கார்த்தி‍‍ + ரீமா + ஆண்ட்ரியா மூவரும் மற்றவர்களிடம் இருந்து தனித்துப்பிரிகின்றனர். இந்த பொண்ணுங்க ஆங்கில கெட்டவார்த்தைகளை எல்லாம் சரளமாக பேசுகின்றனர் அதை சென்சார் செய்தாலும் நன்றாகவே கேட்க முடிகிறது. மூவரும் பாலைவனத்தை கடக்கின்றனர் பசி தாகத்துடன்.  


மூவரும் ஒரு சதுப்பு நிலம் போன்ற இடத்தில் செல்கின்றனர் இங்கே கண்ணுக்கு அறியா புதைகுழிகள் ஏராளம் அதை எப்படி கடப்பது என்று ஆர்க்கியாலஸிட் ஆண்ட்ரியா கண்டுபிடிக்கிறார் ஓலைச்சுவடிகள் மூலம். நல்ல ரசனையான கண்டுபிடிப்பு மேலும் இந்த இடத்தில் பேக்கிரவுண்ட் இசை அருமை. என்ன யுவன் இருந்தால் இன்னும் மெனக்கெட்டிருப்பார்.  


அடுத்த ஆபத்தாக கிராமம் சோழர்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்தாக பெருமைப்படுகின்றன்ர் அங்கே ஒரு பாட்டு ஒம்மேல ஆசை தான் பாட்டு. அந்த பாட்டு எடுக்கப்பட்டிருக்கும் இடம் அருமையான லொகேசன் படத்தின் கதைக்கு நல்ல வழு சேர்க்கும் இடம். பாடல் முடிந்த உடன் இருக்கும் காட்சி அருமையோ அருமை. அதாவது அந்த இடத்தை கடப்பவர்களுக்கு சூணியம் வைத்தது போல பைத்தியம் பிடித்து தன்னிலை மறப்பர். இந்த காட்சியில் மூவரும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருப்பாங்க. 


அந்த சுயநினைவில்லா நிலையில் சோழர்களின் இடத்தை அடைகின்றனர். அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி இன்னும் சோழர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதை பார்த்து. மிகவும் வறுமையில் ஒரு வேளை உணவிற்காக சோழர்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர் இந்த சோழர்களின் அரசனாக பார்த்திபன் நல்ல மிடுக்காக நடித்துள்ளார். நல்ல கம்ப்பீரம் குரலும் ஒத்துழைக்கிறது ராசாவிற்கு. 


சோழர்கள் இன்னும் பழைய பேச்சுத்தமிழையே பயன்படுத்துகின்றனர். அந்த தமிழ் பெரும்பாலோனருக்கு புரியவில்லை என்பது இயக்குனருக்கு தோல்வியே சப்டைட்டில் போட்டிருக்கலாம். இலங்கைத்தமிழ் பேச்சு வழக்கு போல் இருக்கிறது கேட்க.  


சோழர்களிடம் அகப்படும் மூவரும் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். அந்த சமயத்தில் ரீமா தான் சோழர்களின் தளபதி உடையார் (என்னமோ பேர் சொல்கின்றார்) அவருடைய மகள் என்று விளிக்கிறார் . சோழர்கள் நாட்டின் பாதுகாப்பிறாக இரண்டு இனங்களில்(உடையார், வெள்ளாளர்) பெரும்பாலும் திருமணம் செய்வதாக படித்துள்ளது ஞாபகம் வந்தது. அரசன் நம்மும்படியாக தன் முதுகில் புலிக்கொடியை தோன்ற செய்து மறைக்கிறார் ரீமா. 




எல்லோரும் அந்த சூழலில் நம்பி ரீமாவை தூதுவனாக ஏற்று கொண்டாடி மகிழ்கின்றர். ரீமா பாண்டிய குல தோன்றல் எனவே சோழர்களை பழிதீர்த்து தெய்வ சிலையை மீட்க இவ்வாறு நாடகம் ஆடுகிறார்.  


ரீமா மீட்டாரா? சோழர்கள் என்ன ஆனார்கள்? கார்த்தி என்ன ஆனார்?  




படத்தின் ப்ளஸ் பாயிண்டுகள்  


* அருமையான லொகேசன்கள் 
* அருமையான கலை இயக்கம் (ஆர்ட் டைரக்சன்)
* நல்ல கேமரா * மிக நீண்ட ஆராய்ச்சி 
* ரீமாவின் மிரட்டும் நடிப்பு  


இந்த படத்தைப்பற்றி பொதுவாக மீடியாக்கள் தூற்றுகின்றன ஏன் என்றே தெரியவில்லை. ஆரம்பத்திலே இது ஒரு கற்பனை நிஜமல்லனு கார்ட் போட்ட பின்பும் ஏன் இன்னும் சோழர்களின் வாழ்க்கை முறை வாழ்ந்த முறையை பத்திரிக்கைகள் அடம்பிடித்து எழுதுகின்றன? ஆங்கில பட்த்திற்கு இனை என்றே இந்த படத்தினை குறிப்பிடலாம் 30 கோடியில் இவ்வளவு பிரமாண்டமான படத்தை சங்கர் கூட நினைத்து பார்க்கமாட்டார்.  


படத்தில் க்ளாமர் அதிகமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு நிஜம் தான் ரசிகர்களை வறட்சியாக பாலைவனம், பாம்பு என்று போரடிக்காமல் இருக்கவே செல்வா பயன்படுத்திருககர். ஆனாலும் வழக்கமான செல்வா படங்களின் கவர்ச்சி இலக்கணங்கள் இந்த படத்திற்கும் உண்டு.  


அந்த இடத்தை சேர்ந்த உடன் மேலதிக துருப்புகளை பெற ஐபோன் எடுப்பது ஒரு குறையாக சொல்லப்படுகிறது. பழமையையும் புதுமையும் இணைத்துப்பார்க்க முடியாமல் தவிப்பதால் இந்த காட்சிப்பிழை விமர்சகர்களுக்கு. ஹெலிகாப்டரில் வந்து சேரும் உதவிகளை வைத்து நேரடியாகவே இங்கு வந்திருக்கலாமே ஹெலிகாப்டரில் என்று சொல்பவர்களும் உண்டு இந்த இடத்தை கண்டுபிடிச்ச பின்பு தான் இங்கே சோழர்கள் இருக்கின்றர் என்றே அறிய முடிகிறது. 


மைன்ஸ் கொஞ்சம் லாஜிக் மீறல்களே அவையும் மறக்கூடியவைகளே. மொத்தத்தில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே இந்த படம்.

Friday, January 08, 2010

படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -3

பகுதி 1 2
படங்களை முழுவதும் காண படத்தினை க்ளிக் செய்யவும்

சென்ற பகுதியில் கொஞ்சம் அடிப்படை விசயங்களை பார்த்தோம் இந்த பகுதியில் நாம் மேலதிக அடிப்படை கூறுகளை காண்போம்.



மேலே உள்ள படத்தினை கவனியுங்கள் இந்த திரை தோன்ற file =>Properties எனும் மெனுவிற்கு செல்லவும். இந்த பிராப்பர்டீஸ் நம்முடைய புராஜக்டின் பண்புகளை தீர்மானிக்கும் திரையாகும். இதிலே நம்முடைய புராஜக்ட்டின் தன்மை , வெளியிடு, உள்ளீடு பற்றிய விசயங்களை சொல்லபோகின்றோம் இந்த விசயங்களை எந்த நேரத்திலும் நம்மால் மாற்ற இயலும் என்பது தனித்தன்மையே வேகாஸில்.

மேலே உள்ள படத்தில் மொத்தம் 5 டேப்புகள் உள்ளன. அவற்றில் முதலில் முதல் இரண்டினைப்பற்றி காண்போம் .

விடியோ எனும் டேபில் சில பண்புகள் குறிக்கப்பட்டுள்ளன.
Template எனும் இடத்தில் combo பெட்டியில் சில பொதுவான புராஜக்ட் டெம்ப்ளட்டுகள் இருக்கும் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லையெனில் நமக்கு தேவையானவற்றை நாமே உருவாக்கி சேமித்தும் வைத்துக்கொள்ளலாம் சேமிக்க, அழிக்க இதற்கு அருகிலே பட்டன்கள் இருக்கின்றன.


இந்த டெம்ப்ளட்டுகள் என்ன வேலையை செய்யும் ? நம்முடைய புராஜக்ட் ntsc/pal , stereo/5.1 surround , widescreen , frame rate போன்ற விசயங்களை தீர்மானிக்க உதவுகிறது. இதிலே வகை வகையான டெம்ப்ளெட்டுகள் உதாரணத்திற்கு படத்திலே இருப்பது NTSC DV (720 X 480 , 29.97 fps) அதனுடைய பண்புகள் கீழே உள்ள கட்டங்களில் குறிக்கப்பட்டிருக்கும் , இதே போல நீங்கள் pal பயன்படுத்தினால் அதற்கும் டெம்ப்ளட் இருக்கும்.

குறிப்பு: டெம்ப்ளட்டில் ஒன்றும் , உள்ளீடு/வெளியீடு வேறு வகையாகவும் இருந்தால் வெளியீட்டில் குறை , அதிக நேரம் எடுத்துக்கொள்ளுதல் போன்றவை நேரலாம். அதனால் என்ன வெளியீடு வேண்டும் என்பதை தீர்மானித்து இந்த டெம்ளட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

width , height போன்றவை வீடியோவின் width , height யை குறிக்கின்றன. இதிலும் standard இருக்கு அதாவது படத்திலே உள்ள டெம்ளட்டை கவனியுங்கள் அதில் width , height 720/480 என்று இருக்கிறது இது ஒரு ntsc  டிவிடி அவுட்புட்டுக்கு ஏற்ற அளவு . இல்லை என்னிடம் சோர்ஸ் வீடியோவின் அளவு வேறு மாதிரியாக இருக்கு அதற்கு ஏற்றார் போல செய்ய வேண்டும் என்றால் இங்கு மாற்றம் செய்யலாம் ஆனாலும் எல்லாவற்றிற்கும் குறிப்பிட்ட வகை width , height கள் உள்ளன அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

PAL Video:

720 x 576 pixels MPEG2 (Called Full-D1)
704 x 576 pixels MPEG2
352 x 576 pixels MPEG2
352 x 288 pixels MPEG2
352 x 288 pixels MPEG1 (Same as the VCD Standard)
25 fps
16:9 Anamorphic (only supported by 720x576)


NTSC (NTSC Film) Video:


720 x 480 pixels MPEG2 (Called Full-D1)
704 x 480 pixels MPEG2
352 x 480 pixels MPEG2 (Called Half-D1)
352 x 240 pixels MPEG2
352 x 240 pixels MPEG1 (Same as the VCD Standard)
29,97 fps
16:9 Anamorphic (only supported by 720x480)



இவை தான் ஸ்டாண்டர் அளவுகள் இவற்றையே பின்பற்ற வேண்டும். இதே போல HD க்கு வேறு படும் மேலே உள்ளவை SD க்கு உரியவை.உள்ளே இருக்கும் டெம்ளட்டுகளை பார்த்தாலே நல்ல ஐடியா கிடைக்கும்.


field order - எனும் இடத்தில் video capturing செய்யும் பொழுது என்ன பீல்ட் ஆர்ட்டரோ அந்த பீல்ட் ஆர்டர் கொடுங்கள் இல்லையேல் இண்டர்லேஸ் பிராப்லம் வரும். அதவாது இயக்க சூழலில் படத்தில் தொய்வு, கண் அயர்வை ஏற்படுத்தும் காட்சிகள் உருவாகும். உங்களுக்கு தேவையான ஆர்டரை தேர்வு செய்துக்கங்க கேப்சரிலே.



pixel aspect ratio - இதுவும் நம்முடைய புராஜக்ட்டுக்கு ஏற்ற வண்ணம் தேர்வு செய்துகொள்ளலாம். 


out put rotation - இது வீடியோவின் வெளியீட்டில் ரொட்டே செய்ய


frame rate - இதுவும் ஏற்கனவே பார்த்திருக்கோம். ntsc - 29.97 or 23.97 , pal- 25 வை போக HD க்கு வேறுபடும்.


pixel format - 8 bit வீடியோவிலே வைத்துக்கொள்ளுங்கள்32 bit floating point வைக்க வீடியோவினை கேப்சர் செய்த வீடியோ 10-bit yuv யாக இருக்க வேண்டும்.


compositing gamma - 8bit வீடியோவிற்கு 2.222 வைக்க வேண்டும் 32 bit floating point க்கு 1.000 வைக்க வேண்டும்.


full resolution rendering quality - best ல் வைத்தால் தரமான அவுட்புட் கிடைக்கும் இதிலும் சில உள்ளே இருக்கும் வேண்டியதை தேர்வு செய்யுங்கள் தேர்வு செய்வதற்கேற்ப வெளியீட்டின் நேரம் தாமதம் ஆகும்.


 motion blur type - இயக்க நேரத்தில் என்ன வகையான ப்ளர் வேண்டும் என்பதில் எப்பொழுது Gaussian என்பதையே கொடுங்க மிச்சதெல்லாம் (pyramid , box)வீடியோவின் தரத்தை பாதிக்கும் வெளியீட்டில் வீடியோ உடைவது(காட்சிகள்) மங்கலான தன்மை போன்றவை தோன்றும்.


Deinterlace method - ல் none என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள் அதுவே சிறந்த அமைப்பு.



Adjust source media to better match project or render settings - இதை தேர்வு செய்தால் வேகாஸ் அதுவாகவே அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் சோர்ஸ் - அவுட்புட்டுக்கு ஏற்ப.



 Prerendered files folder - இடத்தினை தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம். ப்ரீரெண்டர் பைலுக்கு இவ்வாறு வைப்பதன் மூலம் ஒவ்வொரு முறையும் அதனை ரெண்டர் செய்யும் வேலை குறைவு


Free storage space in selected folder - நாம் தேர்வு செய்துள்ள இடம்(சேமிக்கும்) எவ்வளவு காலியாக உள்ளது என்று காட்டும்;


மேலே உள்ள படத்தில் ஆடியோ டேப் திறக்கப்பட்டுள்ளது.

Master bus mode - என்ன வகையான சவுண்ட் பயன்படுத்த (வெளியீடு) போகின்றோம் என்பதை தேர்வு செய்யலாம்.




Sample rate - 44100 , 48000 போன்றவற்றில் எது வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல தேர்வு செய்துகொள்ளலாம்

bit depth - 8,16,24 மூன்றில் எது வேண்டுமோ அவை number of bits used to store each sample. அதிகமான பிட் ஆழம்  நல்ல தரத்தை கொடுக்கும் அதே நேரத்தில் கொள்ளவு அதிகமாகும்.


Resample and stretch quality - பெஸ்ட் ல் வைப்பது நல்லது. 


Resample and stretch quality - 5.1 சர்ரவுண்ட் தேர்வு செய்திருந்தால் மட்டுமே எனபில் ஆகும் இதிலே 5.1 க்கு ஏற்ற டால்பி , டிடிஎஸ் போன்றவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்.

நிறைய விசயங்கள் புதுசு என்றாலும் ஆழமாக சொல்லாமல் சொல்லியுள்ளேன் காரணம் அதிகமான விளக்கம் கொஞ்சம் அதிகமான குழப்பத்தை வருவிக்கும் மேலும் இந்த தொழில்நுட்ப சங்கதிகள் தொடர் முடிவடைவதற்குள் நல்ல பழக்கத்திற்கு வந்துவிடும்.

தொடரும்

பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க