Friday, February 26, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்

நடிப்பு : சிம்பு , த்ரிஷா மற்றும் சிலர்
இயக்கம் : கௌதம் வாசுதேவ மேனன்
இசை :ஏ.ஆர்.ரஹ்மான்

த்ரிஷாவின் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் படம் ஆரம்பிக்கிறது. சிம்புவின் பார்வையில் படம் சொல்லப்படுகிறது.

கார்த்திக்(சிம்பு) மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் முடித்து சினிமா ஆசையில் இயக்குநர் ஆக வேண்டும் என்று கனவோடு இருப்பவர். போலரிஸில் மென்பொருள் பணியில் இருக்கும் ஜெஸ்ஸி(த்ரிஷா) மலையாள கிறிஸ்துவக்குடும்ப பெண். ஜெஸ்ஸியின் வீட்டின் கீழ்த்தளத்தில் குடிவருகிறார்கள் சிம்பு குடும்பத்தினர்.

அங்கு த்ரிஷாவை கண்டவுடன் காதல் கொள்கிறார். அதை வெளிப்படுத்த துடிக்கிறார். சில இடைஞ்சல்கள் த்ரிஷா சிம்புவை விட ஒரு வயது மூத்தவர்,த்ரிஷாவின் அப்பாவிற்கு தன் மகளை ஒரு கிறிஸ்துவப்பையனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.

இவையெல்லாம் எடுத்துச்சொல்லியும் சிம்பு காதலில் உறுதியாக இருக்கிறார். த்ரிஷாவை தேடி கேரளா வரைக்கும் செல்கிறார். அந்த உருகலில் த்ரிஷா காதல் கொள்கிறார் ஆனால் வெளிப்படுத்த மறுக்கிறார். இந்த காதலினால் வலி தான் அதிகமாம் எனவே வேண்டாம் என்று மறுக்கிறார்.

இவர்களின் பழக்கம் த்ரிஷாவின் அண்ணனுக்கு தெரியவர அது கைகலப்பில் முடிய இரு குடும்பங்களும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. அப்பொழுது தான் த்ரிஷா தன் காதலை வெளிப்படுத்துகிறார் கோபத்தில்.


பெண்களுக்கே (காதலில்)ஏற்படும் முட்டாள் தனமான கோபத்தால் த்ரிஷா சிம்புவை பிரிகிறார்.

த்ரிஷாவை பிரிந்த வலியில் இருக்கும் சிம்பு தனது காதல் கதையே சினிமாவக எடுக்கிறார்.  படப்பிடிப்பின் போது த்ரிஷாவை சந்திக்கிறார். த்ரிஷாவிற்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்தது சிம்பு , த்ரிஷா கல்யாணம் செய்துகொண்டு முதல் படமும் வெளியாகிறது. சிம்பு-த்ரிஷா என்ன ஆனார்கள்.....

க்ளைமாக்ஸ் இயக்குநரின் , காதலியின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதால் இரட்டை க்ளைமாக்ஸ் போல தெரியும் ஆனாலும் நல்ல க்ளைமாக்ஸ். வித்தியாசம் தான் ஆண்டி க்ளைமாக்ஸ் என்றாலும்.

சிம்பு அடக்க ஒடுக்கமாக நடித்துள்ளார் கொஞ்சம் ஸ்மார்டாக இருக்கிறார், சாதரண மிடில் க்ளாஸ் வாலிபனாகவே வாழ்ந்துள்ளார். த்ரிஷா நிஜமாகவே கனவு தேவதை தான் த்ரிஷாவை இவ்வளவு அழகாக யாரும் காட்ட முடியாது. சிம்பு கூட இருக்கும் நண்பராக வரும் நபர் பெயர் தெரியவில்லை ஆனால் படத்தில் அவர் காக்க காக்க கேமரா மேன் கணேஷ் என்று காட்டப்படுகிறார்.

சிம்பு - த்ரிஷா - கணேஷ் இந்த மூவர் மட்டுமே படம் முழுவதும் வியாப்பித்துள்ளனர். வேறு சில நடிகர்கள் இருந்தாலும் சில காட்சிகள் மட்டுமே. சிம்புவின் ப்ரண்ட்ஸ் வட்டம் என்று தனிப்பட்டு காட்டப்படவில்லை என்பதால் சிறிது நகைச்சுவை தேக்கமே வாரணம் ஆயிரம் போல்.

சிம்பு - கணேஷ் த்ரிஷாவை தேடி கேரளா போவதும் த்ரிஷாவின் கல்யாணத்திற்கு போவதும் நல்ல காமெடி.

முதல் பாதி நன்றாக போகிறது த்ரிஷா பிரிந்து சென்ற பின்னர் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு. சினிமாத்தனமான பில்டப் இல்லாத காதல் காட்சிகளும், காதல் பிரிவும். க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் என்றாலும் ரசிக்க முடிகிறது. காதல் பிரிவை கொடுமையாக சித்தரித்த தமிழ் சினிமாவில் இந்த நடைமுறை காதல் பிரிவும் வித்தியாசமே.

பாடல்களில் ஏ.ஆர்.ஆர் பின்னிருக்கார். பிஜிஎம் ஏனோ ஆங்கில பாடல்களின் தொகுப்பு போலவே இருக்கிறது. பாடல்கள் அருமையோ அருமை...

பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்ப்.

கேமரா நன்றாக கையாண்டுள்ளார். நிறைய க்ளோசப் ஷாட்டுகள் மூலம் த்ரிஷாவை(பெண்களுக்கு சிம்பு) ரசித்து ஏற்க வைத்துள்ளார்.

எடிட்டிங் ஆண்டனி சொல்லவா வேணும் நல்லாவே இருக்கு கேரள படகு பயணத்தில் கேமரா பயணிக்க அந்த தண்ணீரிலே பெயர் போடப்படுவது அழகு.

கௌதம் சொந்த கதையை படமாக்கிருப்பாரோனு தோனுது. நாகரீகமான மெச்சூரானா , நடுத்தர குடும்பத்து காதல். ஆபாசம் இல்லா அநாகரிகம் இல்லா காட்சிகள் குடும்பத்துடன் சென்று பார்க்கவைக்கும் முகம் சுழிக்க வைக்கா காட்சிகள். இந்த முறையை தன்படங்களில் கௌதம் எப்பொழுதும் பின்பற்றுகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா - தேவதையின் வெளிச்சம்

நண்பர்கள் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

5 comments:

  1. mulu kathayaiyayum solvathu thaan vimarsanama?

    thayavu senchu ipadipata vimarsanam venaam. cable shankar vimarsanam paarungal......

    ReplyDelete
  2. நலல் விமர்சனம் நண்பரே

    ReplyDelete
  3. நன்றி dhans மற்றும் கேபிள் நண்பரே. அடுத்த விமர்சனங்களில் மாற்றிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. dhans இப்படித்தான் எழுத வேண்டுமென்று சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மணி உங்கள் விமர்சனம் சரியானது. உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். கேபிள் சங்கர் விமர்சனம் படித்தால் போதுமா? என்ன ரகளை இது ? போதும்..

    ReplyDelete
  5. ippadi muttha katchigal ulla padathithan kudumbathudan theateril parkka mudiuma. kuripaga antha train and building scene.

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்